முகப்பு |
கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார் |
144. குறிஞ்சி |
பெருங் களிறு உழுவை தாக்கலின், இரும் பிடி |
||
கருவி மா மழையின் அரவம் அஞ்சுபு, |
||
போது ஏர் உண் கண் கலுழவும், ஏதில் |
||
பேதை நெஞ்சம் கவலை கவற்ற |
||
5 |
ஈங்கு ஆகின்றால்-தோழி!-பகுவாய்ப் |
|
பிணவுப் புலி வழங்கும் அணங்கு அருங் கவலை, |
||
அவிர் அறல் ஒழுகும் விரை செலல் கான் யாற்றுக் |
||
கரை அருங் குட்டம் தமியர் நீந்தி, |
||
விரவு மலர் பொறித்த தோளர் |
||
10 |
இரவின் வருதல் அறியாதேற்கே. | உரை |
ஆற்றது ஏதத்திற்குக்கவன்று சிறைப்புறமாகத் தலைவி சொல்லியது.-கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்
|
213. குறிஞ்சி |
அருவி ஆர்க்கும் பெரு வரை நண்ணி, |
||
'கன்று கால்யாத்த மன்றப் பலவின் |
||
வேர்க் கொண்டு தூங்கும் கொழுஞ் சுளைப் பெரும் பழம் |
||
குழவிச் சேதா மாந்தி, அயலது |
||
5 |
வேய் பயில் இறும்பின் ஆம் அறல் பருகும் |
|
பெருங் கல் வேலிச் சிறுகுடி யாது?' என, |
||
சொல்லவும் சொல்லீர்; ஆயின், கல்லென |
||
கருவி மா மழை வீழ்ந்தென, எழுந்த |
||
செங் கேழ் ஆடிய செழுங் குரற் சிறு தினைக் |
||
10 |
கொய் புனம் காவலும் நுமதோ?- |
|
கோடு ஏந்து அல்குல், நீள் தோளீரே! | உரை | |
மதி உடன்படுக்கும் தலைமகன் சொல்லியது.-கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்
|