முகப்பு |
கணக்காயனார் |
23. குறிஞ்சி |
தொடி பழி மறைத்தலின், தோள்உய்ந்தனவே; |
||
வடிக் கொள் கூழை, ஆயமோடு ஆடலின், |
||
இடிப்பு மெய்யது ஒன்று உடைத்தே; கடிக் கொள |
||
அன்னை காக்கும் தொல் நலம் சிதைய, |
||
5 |
காண்தொறும் கலுழ்தல் அன்றியும் ஈண்டு நீர் |
|
முத்துப் படு பரப்பின் கொற்கை முன்துறைச் |
||
சிறு பாசடைய செப்பு ஊர் நெய்தல் |
||
தெண் நீர் மலரின் தொலைந்த |
||
கண்ணே காமம் கரப்பு அரியவ்வே! | உரை | |
தலைவி துயர் ஆற்றாமை உணர்ந்த தோழி வரைவு கடாயது.-கணக்காயனார்
|
24. பாலை |
'பார் பக வீழ்ந்த வேருடை விழுக்கோட்டு |
||
உடும்பு அடைந்தன்ன நெடும் பொரி விளவின், |
||
ஆட்டு ஒழி பந்தின், கோட்டு மூக்கு இறுபு, |
||
கம்பலத்தன்ன பைம் பயிர்த் தாஅம் |
||
5 |
வெள்ளில் வல்சி வேற்று நாட்டு ஆர் இடைச் |
|
சேறும், நாம்' எனச் சொல்ல-சேயிழை!- |
||
'நன்று' எனப் புரிந்தோய்; நன்று செய்தனையே; |
||
செயல்படு மனத்தர் செய்பொருட்கு |
||
அகல்வர், ஆடவர்; அது அதன் பண்பே. | உரை | |
பொருட்பிரிவுக்கு உடன்பட்ட தோழியைத் தலைவி உவந்து கூறியது. -கணக்காயனார்
|