முகப்பு |
கழார்க் கீரன் எயிற்றியனார் |
281. பாலை |
மாசு இல் மரத்த பலி உண் காக்கை |
||
வளி பொரு நெடுஞ் சினை தளியொடு தூங்கி, |
||
வெல் போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும் |
||
நல் வகை மிகு பலிக் கொடையோடு உகுக்கும் |
||
5 |
அடங்காச் சொன்றி, அம் பல் யாணர் |
|
விடக்குடைப் பெருஞ் சோறு, உள்ளுவன இருப்ப, |
||
மழை அமைந்து உற்ற மால் இருள் நடு நாள், |
||
தாம் நம் உழையராகவும், நாம் நம் |
||
பனிக் கடுமையின், நனி பெரிது அழுங்கி, |
||
10 |
துஞ்சாம் ஆகலும் அறிவோர் |
|
அன்பிலர்-தோழி!-நம் காதலோரே. | உரை | |
வன்பொறை எதிர் அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது; 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழி தலைமகட்கு உரைத்ததூஉம் ஆம்.- கழார்க் கீரன் எயிற்றியார்
|
312. பாலை |
நோகோ யானே, நோம் என் நெஞ்சே- |
||
'பனிப் புதல் ஈங்கை அம் குழை வருட, |
||
சிறை குவிந்திருந்த பைதல் வெண் குருகு, |
||
பார்வை வேட்டுவன், காழ் களைந்தருள, |
||
5 |
மாரி நின்ற, மையல் அற்சிரம்- |
|
யாம் தன் உழையம் ஆகவும், தானே, |
||
எதிர்த்த தித்தி முற்றா முலையள், |
||
கோடைத் திங்களும் பனிப்போள்- |
||
வாடைப் பெரும் பனிக்கு என்னள்கொல்?' எனவே. | உரை | |
பொருள் வலித்த தலைமகன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது.-கழார்க் கீரன் எயிற்றியார்
|