முகப்பு |
நல்வேட்டனார் |
53. குறிஞ்சி |
யான் அஃது அஞ்சினென் கரப்பவும், தான் அஃது |
||
அறிந்தனள்கொல்லோ? அருளினள்கொல்லோ? |
||
எவன்கொல், தோழி! அன்னை கண்ணியது?- |
||
'வான் உற நிவந்த பெரு மலைக் கவாஅன், |
||
5 |
ஆர் கலி வானம் தலைஇ, நடு நாள் |
|
கனை பெயல் பொழிந்தென, கானக் கல் யாற்று |
||
முளி இலை கழித்தன முகிழ் இணரொடு வரும் |
||
விருந்தின் தீம் நீர் மருந்தும் ஆகும்; |
||
தண்ணென உண்டு, கண்ணின் நோக்கி, |
||
10 |
முனியாது ஆடப் பெறின், இவள் |
|
பனியும் தீர்குவள், செல்க!' என்றோளே! | உரை | |
வரைவு நீட்டிப்ப, தோழி சிறைப்புறமாகச் சொல்லியது.-நல்வேட்டனார்
|
292. குறிஞ்சி |
நெடுந் தண் ஆரத்து அலங்கு சினை வலந்த |
||
பசுங் கேழ் இலைய நறுங் கொடித் தமாலம் |
||
தீம் தேன் கொள்பவர் வாங்குபு பரியும், |
||
யாணர் வைப்பின், கானம் என்னாய்; |
||
5 |
களிறு பொரக் கரைந்த கயவாய்க் குண்டு கரை |
|
ஒளிறு வான் பளிங்கொடு செம் பொன் மின்னும் |
||
கருங் கற் கான்யாற்று அருஞ் சுழி வழங்கும் |
||
கராஅம் பேணாய்; இரவரின், |
||
வாழேன்-ஐய!-மை கூர் பனியே! | உரை | |
இரவுக்குறி மறுத்தது.- நல்வேட்டனார்
|