முகப்பு |
பொதும்பில் கிழார் மகன் வெண்கண்ணி, பொதும்பில் கிழார் மகனார் |
375. நெய்தல் |
நீடு சினைப் புன்னை நறுந் தாது உதிர, |
||
கோடு புனை குருகின் தோடு தலைப் பெயரும் |
||
பல் பூங் கானல் மல்கு நீர்ச் சேர்ப்ப! |
||
அன்பு இலை; ஆதலின், தன் புலன் நயந்த |
||
5 |
என்னும் நாணும் நன்னுதல் உவப்ப, |
|
வருவைஆயினோ நன்றே-பெருங் கடல் |
||
இரவுத் தலை மண்டிலம் பெயர்ந்தென, உரவுத் திரை |
||
எறிவன போல வரூஉம் |
||
உயர் மணல் படப்பை எம் உறைவின் ஊரே. | உரை | |
வரையாது நெடுங்காலம் வந்தொழுக, தலைமகளது நிலை உணர்ந்த தோழி வரைவு கடாயது-பொதும்பில் கிழார் மகன் வெண்கண்ணி
|
387. பாலை |
நெறி இருங் கதுப்பும், நீண்ட தோளும், |
||
அம்ம! நாளும் தொல் நலம் சிதைய, |
||
ஒல்லாச் செந் தொடை ஒரீஇய கண்ணிக் |
||
கல்லா மழவர் வில்லிடை விலங்கிய |
||
5 |
துன் அருங் கவலை அருஞ் சுரம் இறந்தோர் |
|
வருவர் வாழி-தோழி!-செரு இறந்து |
||
ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்த |
||
வேல் கெழு தானைச் செழியன் பாசறை |
||
உறை கழி வாளின் மின்னி, உதுக்காண், |
||
10 |
நெடும் பெருங் குன்றம் முற்றி, |
|
கடும் பெயல் பொழியும், கலி கெழு வானே. | உரை | |
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறீஇயது.- பொதும்பில் கிழார் மகனார்
|