முகப்பு |
மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார் |
250. மருதம் |
நகுகம் வாராய்-பாண!-பகுவாய் |
||
அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப, தெருவில் |
||
தேர் நடைபயிற்றும் தேமொழிப் புதல்வன் |
||
பூ நாறு செவ் வாய் சிதைத்த சாந்தமொடு |
||
5 |
காமர் நெஞ்சம் துரப்ப, யாம் தன் |
|
முயங்கல் விருப்பொடு குறுகினேமாக, |
||
பிறை வனப்பு உற்ற மாசு அறு திரு நுதல் |
||
நாறு இருங் கதுப்பின் எம் காதலி வேறு உணர்ந்து, |
||
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ, |
||
10 |
'யாரையோ?' என்று இகந்து நின்றதுவே! | உரை |
புதல்வனொடு புக்க தலைமகன் ஆற்றானாய்ப் பாணற்கு உரைத்தது.-மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்
|
369. நெய்தல் |
சுடர் சினம் தணிந்து குன்றம் சேர, |
||
நிறை பறைக் குருகினம் விசும்பு உகந்து ஒழுக, |
||
எல்லை பைபயக் கழிப்பி, முல்லை |
||
அரும்பு வாய் அவிழும் பெரும் புன் மாலை |
||
5 |
இன்றும் வருவது ஆயின், நன்றும் |
|
அறியேன் வாழி-தோழி!-அறியேன், |
||
ஞெமை ஓங்கு உயர் வரை இமையத்து உச்சி, |
||
வாஅன் இழிதரும் வயங்கு வெள் அருவிக் |
||
கங்கைஅம் பேர் யாற்றுக் கரை இறந்து இழிதரும் |
||
10 |
சிறை அடு கடும் புனல் அன்ன, என் |
|
நிறை அடு காமம் நீந்துமாறே. | உரை | |
பட்ட பின்றை வரையாது பொருள்வயிற் பிரிந்து, ஆற்றாளாகிய தலைமகள் வன்புறை எதிர் அழிந்தது.-மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்
|