முகப்பு |
மாமூலனார் |
14. பாலை |
தொல் கவின் தொலைய, தோள் நலம்சாஅய, |
||
நல்கார் நீத்தனர்ஆயினும், நல்குவர்; |
||
நட்டனர், வாழி!-தோழி!-குட்டுவன் |
||
அகப்பா அழிய நூறி, செம்பியன் |
||
5 |
பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிகப் பெரிது |
|
அலர் எழச் சென்றனர் ஆயினும்-மலர் கவிழ்ந்து |
||
மா மடல் அவிழ்ந்த காந்தள்அம் சாரல், |
||
இனம் சால் வயக் களிறு பாந்தட் பட்டென, |
||
துஞ்சாத் துயரத்து அஞ்சு பிடிப் பூசல் |
||
10 |
நெடு வரை விடரகத்து இயம்பும் |
|
கடு மான் புல்லிய காடு இறந்தோரே. | உரை | |
இயற்பழித்த தோழிக்குத் தலைவி இயற்பட மொழிந்தது.- மாமூலனார்
|
75. குறிஞ்சி |
நயன் இன்மையின், பயன் இது என்னாது, |
||
பூம் பொறிப் பொலிந்த, அழல் உமிழ் அகன் பை, |
||
பாம்பு உயிர் அணங்கியாங்கும் ஈங்கு இது |
||
தகாஅது-வாழியோ, குறுமகள்!-நகாஅது |
||
5 |
உரைமதி; உடையும் என் உள்ளம்-சாரல் |
|
கொடு விற் கானவன் கோட்டுமா தொலைச்சிப் |
||
பச்சூன் பெய்த பகழி போல, |
||
சேயரி பரந்த மா இதழ் மழைக் கண் |
||
உறாஅ நோக்கம் உற்ற என் |
||
10 |
பைதல் நெஞ்சம் உய்யுமாறே. | உரை |
சேட்படுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன் தோழி கேட்பச்சொல்லியது.-மாமூலனார்
|