முகப்பு |
முடத்திருமாறன், முடத்திருமாறனார் |
105. பாலை |
முளி கொடி வலந்த முள் அரை இலவத்து |
||
ஒளிர் சினை அதிர வீசி, விளிபட |
||
வெவ் வளி வழங்கும் வேய் பயில் மருங்கில், |
||
கடு நடை யானை கன்றொடு வருந்த, |
||
5 |
நெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண் |
|
அருஞ் சுரக் கவலைய என்னாய்; நெடுஞ் சேண் |
||
பட்டனை, வாழிய-நெஞ்சே!-குட்டுவன் |
||
குட வரைச் சுனைய மா இதழ்க் குவளை |
||
வண்டு படு வான் போது கமழும் |
||
10 |
அம் சில் ஓதி அரும் படர் உறவே. | உரை |
இடைச் சுரத்து மீளலுற்ற நெஞ்சினைத் தலைமகன் கழறியது.-முடத்திருமாறன்
|
228. குறிஞ்சி |
என் எனப்படுமோ-தோழி!-மின்னு வசிபு |
||
அதிர் குரல் எழிலி, முதிர் கடன் தீர, |
||
கண் தூர்பு விரிந்த கனை இருள் நடு நாள், |
||
பண்பு இல் ஆர் இடை வரூஉம் நம் திறத்து |
||
5 |
அருளான்கொல்லோ தானே-கானவன் |
|
சிறு புறம் கடுக்கும் பெருங் கை வேழம், |
||
வெறி கொள் சாபத்து எறி கணை வெரீஇ, |
||
அழுந்துபட விடரகத்து இயம்பும் |
||
எழுந்து வீழ் அருவிய மலை கிழவோனே? | உரை | |
தோழி, சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்,தலைமகன் கேட்பச் சொல்லியது.-முடத்திருமாறனார்
|