முகப்பு |
முதுகூற்றனார் |
28. பாலை |
என் கைக் கொண்டு தன் கண்ஒற்றியும், |
||
தன் கைக் கொண்டு என் நல் நுதல் நீவியும். |
||
அன்னை போல இனிய கூறியும், |
||
கள்வர் போலக் கொடியன்மாதோ- |
||
5 |
மணி என இழிதரும் அருவி, பொன் என |
|
வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து, |
||
ஆடு கழை நிவந்த பைங் கண் மூங்கில் |
||
ஓடு மழை கிழிக்கும் சென்னி, |
||
கோடு உயர் பிறங்கல், மலைகிழவோனே! | உரை | |
பிரிவின்கண்ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி சொல்லியது; குறை நயப்பும் ஆம்.-முதுகூற்றனார்
|
58. நெய்தல் |
பெரு முது செல்வர் பொன்னுடைப்புதல்வர் |
||
சிறு தோட் கோத்த செவ் அரிப்பறையின் |
||
கண்ணகத்து எழுதிய குரீஇப் போல, |
||
கோல் கொண்டு அலைப்பப் படீஇயர்மாதோ- |
||
5 |
வீரை வேண்மான் வெளியன் தித்தன் |
|
முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின் |
||
வெண் கோடு இயம்ப, நுண் பனி அரும்ப, |
||
கையற வந்த பொழுதொடு மெய் சோர்ந்து, |
||
அவல நெஞ்சினம் பெயர, உயர் திரை |
||
10 |
நீடு நீர்ப் பனித் துறைச் சேர்ப்பன் |
|
ஓடு தேர் நுண் நுகம் நுழைந்த மாவே! | உரை | |
பகற்குறி வந்து நீங்கும் தலைமகன் போக்கு நோக்கி, தோழி மாவின்மேல்வைத்துச் சொல்லியது.- முதுகூற்றனார்
|