முகப்பு |
நன்னன் |
270. நெய்தல் |
தடந் தாள் தாழைக் குடம்பை, நோனாத் |
||
தண்டலை கமழும் வண்டு படு நாற்றத்து |
||
இருள் புரை கூந்தல் பொங்கு துகள் ஆடி, |
||
உருள் பொறி போல எம் முனை வருதல், |
||
5 |
அணித் தகை அல்லது பிணித்தல் தேற்றாப் |
|
பெருந் தோட் செல்வத்து இவளினும்-எல்லா!- |
||
எற் பெரிது அளித்தனை, நீயே; பொற்புடை |
||
விரி உளைப் பொலிந்த பரியுடை நன் மான் |
||
வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன் |
||
10 |
கூந்தல் முரற்சியின் கொடிதே; |
|
மறப்பல் மாதோ, நின் விறல் தகைமையே. |
உரை | |
தோழி வாயில் நேர்கின்றாள் தலைமகனை நெருங்கிச் சொல்லி, வாயில் எதிர்கொண்டது,உடனிலைக் கிளவி வகையால்.-பரணர்
|
391. பாலை |
ஆழல், மடந்தை! அழுங்குவர் செலவே- |
||
புலிப் பொறி அன்ன புள்ளி அம் பொதும்பின் |
||
பனிப் பவர் மேய்ந்த மா இரு மருப்பின் |
||
மலர் தலைக் காரான் அகற்றிய தண் நடை |
||
5 |
ஒண் தொடி மகளிர் இழை அணிக் கூட்டும், |
|
பொன் படு, கொண்கான நன்னன் நல் நாட்டு |
||
ஏழிற்குன்றம் பெறினும், பொருள்வயின் |
||
யாரோ பிரிகிற்பவரே-குவளை |
||
நீர் வார் நிகர் மலர் அன்ன, நின் |
||
10 |
பேர் அமர் மழைக் கண் தெண் பனி கொளவே? |
உரை |
பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது; வரைவு உணர்த்தியதூஉம் ஆம்.-பாலை பாடிய பெருங்கடுங்கோ
|