முகப்பு |
பெரியன் |
131. நெய்தல் |
ஆடிய தொழிலும், அல்கிய பொழிலும், |
||
உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடு |
||
ஊடலும் உடையமோ-உயர் மணற் சேர்ப்ப! |
||
திரை முதிர் அரைய தடந் தாள் தாழைச் |
||
5 |
சுறவு மருப்பு அன்ன முட் தோடு ஒசிய, |
|
இறவு ஆர் இனக் குருகு இறைகொள இருக்கும், |
||
நறவு மகிழ் இருக்கை நல் தேர்ப் பெரியன், |
||
கள் கமழ், பொறையாறு அன்ன என் |
||
நல் தோள் நெகிழ மறத்தல், நுமக்கே? |
உரை | |
மணமனையில் பிற்றை ஞான்று புக்க தோழியைத் தலைவன், 'வேறுபடாமை ஆற்றுவித்தாய்; பெரியை காண்' என்றாற்குத் தோழி சொல்லியது.-உலோச்சனார்
|
180. மருதம் |
பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை |
||
கழனி நாரை உரைத்தலின், செந்நெல் |
||
விரவு வெள்ளரிசியின் தாஅம் ஊரன் |
||
பலர்ப் பெறல் நசைஇ, நம் இல் வாரலனே; |
||
5 |
மாயோள், நலத்தை நம்பி விடல் ஒல்லாளே |
|
அன்னியும் பெரியன்; அவனினும் விழுமிய |
||
இரு பெரு வேந்தர், பொரு களத்து ஒழித்த |
||
புன்னை விழுமம் போல, |
||
என்னொடு கழியும்-இவ் இருவரது இகலே. |
உரை | |
தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி தலைமகளிடத்துப் பொறாமை கண்டு சொல்லியது.
|