முகப்பு |
ஆலமரம் (ஆலம்) |
76. பாலை |
வருமழை கரந்த வால் நிற விசும்பின் |
||
நுண் துளி மாறிய உலவை அம் காட்டு |
||
ஆல நீழல் அசைவு நீக்கி, |
||
அஞ்சுவழி அஞ்சாது, அசைவழி அசைஇ, |
||
5 |
வருந்தாது ஏகுமதி-வால் இழைக் குறுமகள்!- |
|
இம்மென் பேர் அலர் நும் ஊர்ப் புன்னை |
||
வீ மலர் உதிர்ந்த தேன் நாறு புலவின் |
||
கானல் வார் மணல் மரீஇ, |
||
கல் உறச் சிவந்த நின் மெல் அடி உயற்கே! |
உரை | |
புணர்ந்து உடன்போகாநின்ற தலைவன் இடைச் சுரத்துத் தலைவிக்கு உரைத்தது.-அம்மூவனார்
|
343. பாலை |
முல்லை தாய கல் அதர்ச் சிறு நெறி |
||
அடையாது இருந்த அம் குடிச் சீறூர்த் |
||
தாது எரு மறுகின், ஆ புறம் தீண்டும் |
||
நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து, |
||
5 |
உகு பலி அருந்திய தொகு விரற் காக்கை |
|
புன்கண் அந்திக் கிளைவயின் செறிய, |
||
படையொடு வந்த பையுள் மாலை |
||
இல்லைகொல் வாழி-தோழி!-நத்துறந்து |
||
அரும் பொருட் கூட்டம் வேண்டிப் |
||
10 |
பிரிந்து உறை காதலர் சென்ற நாட்டே? |
உரை |
தலைமகள் பிரிவிடை ஆற்றாளாய்ச் சொல்லியது.-கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார்
|