முகப்பு |
நொச்சி |
143. பாலை |
ஐதே கம்ம யானே; ஒய்யென, |
||
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து, |
||
ஓரை ஆயமும் நொச்சியும் காண்தொறும், |
||
நீர் வார் கண்ணேன் கலுழும் என்னினும், |
||
5 |
கிள்ளையும், 'கிளை' எனக் கூஉம்; இளையோள் |
|
வழு இலள் அம்ம, தானே; குழீஇ, |
||
அம்பல் மூதூர் அலர் வாய்ப் பெண்டிர் |
||
இன்னா இன் உரை கேட்ட சில் நாள் |
||
அறியேன் போல உயிரேன்; |
||
10 |
'நறிய நாறும் நின் கதுப்பு' என்றேனே. |
உரை |
மனை மருட்சி.-கண்ணகாரன் கொற்றனார்
|
246. பாலை |
இடூஉ ஊங்கண் இனிய படூஉம்; |
||
நெடுஞ் சுவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும்; |
||
மனை மா நொச்சி மீமிசை மாச் சினை, |
||
வினை மாண் இருங் குயில் பயிற்றலும் பயிற்றும்; |
||
5 |
உரம் புரி உள்ளமொடு சுரம் பல நீந்தி, |
|
செய்பொருட்கு அகன்றனராயினும் பொய்யலர், |
||
வருவர் வாழி-தோழி!-புறவின் |
||
பொன் வீக் கொன்றையொடு பிடவுத் தளை அவிழ, |
||
இன் இசை வானம் இரங்கும்; அவர், |
||
10 |
'வருதும்' என்ற பருவமோ இதுவே? |
உரை |
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறீஇயது.-காப்பியஞ் சேந்தனார்
|