முகப்பு |
ஆம்பல் |
6. குறிஞ்சி |
நீர் வளர் ஆம்பற் தூம்புடைத்திரள் கால் |
||
நார் உரித்தன்ன மதன் இல் மாமை, |
||
குவளை அன்ன ஏந்து எழில் மழைக் கண், |
||
திதலை அல்குல், பெருந் தோள், குறுமகட்கு |
||
5 |
எய்தச் சென்று செப்புநர்ப் பெறினே, |
|
'இவர் யார்?' என்குவள் அல்லள்; முனாஅது, |
||
அத்தக் குமிழின் கொடு மூக்கு விளை கனி |
||
எறி மட மாற்கு வல்சி ஆகும் |
||
வல் வில் ஓரி கானம் நாறி, |
||
10 |
இரும் பல் ஒலிவரும் கூந்தல் |
|
பெரும் பேதுறுவள், யாம் வந்தனம் எனவே. | உரை | |
இரவுக்குறிப்பாற்பட்டு ஆற்றானாய தலைவன், தோழி கேட்ப, தன்நெஞ்சிற்குச் சொல்லியது.-பரணர்
|
100. மருதம் |
உள்ளுதொறும் நகுவேன்-தோழி!-வள்உகிர் |
||
மாரிக் கொக்கின் கூரல் அன்ன |
||
குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன் |
||
தேம் கமழ் ஐம்பால் பற்றி, என் வயின் |
||
5 |
வான் கோல் எல் வளை வௌவிய பூசல் |
|
சினவிய முகத்து, 'சினவாது சென்று, நின் |
||
மனையோட்கு உரைப்பல்' என்றலின், முனை ஊர்ப் |
||
பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும் |
||
தேர் வண் மலையன் முந்தை, பேர் இசைப் |
||
10 |
புலம் புரி வயிரியர் நலம் புரி முழவின் |
|
மண் ஆர் கண்ணின் அதிரும், |
||
நன்னர் ஆளன் நடுங்கு அஞர் நிலையே. | உரை | |
பரத்தை, தலைவிக்குப்பாங்காயினார் கேட்ப, விறலிக்கு உடம்படச்சொல்லியது.-பரணர்
|