முகப்பு |
முல்லை |
248. முல்லை |
'சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு வீ, |
||
பொறி வரி நல் மான் புகர் முகம் கடுப்ப, |
||
தண் புதல் அணிபெற மலர, வண் பெயல் |
||
கார் வரு பருவம்' என்றனர்மன்-இனி, |
||
5 |
பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர், |
|
அன்பு இன்மையின் பண்பு இல பயிற்றும் |
||
பொய் இடி அதிர் குரல் வாய் செத்து ஆலும் |
||
இன மயில் மடக் கணம் போல, |
||
நினை மருள்வேனோ? வாழியர், மழையே! | உரை | |
பருவம் கண்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி மழை மேல் வைத்துப் பருவம் மறுத்தது.-காசிபன் கீரனார்
|
321. முல்லை |
செந் நிலப் புறவின் புன் மயிர்ப் புருவை |
||
பாடு இன் தெள் மணித் தோடு தலைப்பெயர, |
||
கான முல்லைக் கய வாய் அலரி |
||
பார்ப்பன மகளிர் சாரற் புறத்து அணிய, |
||
5 |
கல் சுடர் சேரும் கதிர் மாய் மாலை, |
|
புல்லென் வறு மனை நோக்கி, மெல்ல |
||
வருந்தும்கொல்லோ, திருந்துஇழை அரிவை? |
||
வல்லைக் கடவுமதி தேரே; சென்றிக, |
||
குருந்து அவிழ் குறும்பொறை பயிற்ற, |
||
10 |
பெருங் கலி மூதூர் மரம் தோன்றும்மே. | உரை |
வினை முற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது.-மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
|
343. பாலை |
முல்லை தாய கல் அதர்ச் சிறு நெறி |
||
அடையாது இருந்த அம் குடிச் சீறூர்த் |
||
தாது எரு மறுகின், ஆ புறம் தீண்டும் |
||
நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து, |
||
5 |
உகு பலி அருந்திய தொகு விரற் காக்கை |
|
புன்கண் அந்திக் கிளைவயின் செறிய, |
||
படையொடு வந்த பையுள் மாலை |
||
இல்லைகொல் வாழி-தோழி!-நத்துறந்து |
||
அரும் பொருட் கூட்டம் வேண்டிப் |
||
10 |
பிரிந்து உறை காதலர் சென்ற நாட்டே? | உரை |
தலைமகள் பிரிவிடை ஆற்றாளாய்ச் சொல்லியது.-கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார்
|