முகப்பு |
வள்ளி |
269. பாலை |
குரும்பை மணிப் பூண் பெருஞ் செங் கிண்கிணிப் |
||
பால் ஆர் துவர் வாய்ப் பைம் பூட் புதல்வன், |
||
மாலைக் கட்டில், மார்பு ஊர்பு இழிய, |
||
அவ் எயிறு ஒழுகிய அவ் வாய் மாண் நகைச் |
||
5 |
செயிர் தீர் கொள்கை நம் உயிர் வெங் காதலி |
|
திருமுகத்து அலமரும் கண் இணைந்து அல்கலும், |
||
பெரும! வள்ளியின் பிணிக்கும் என்னார், |
||
சிறு பல் குன்றம் இறப்போர்; |
||
அறிவார் யார், அவர் முன்னியவ்வே? | உரை | |
தோழி வாயில் மறுத்தது; செலவு அழுங்குவித்ததூஉம் ஆம்.- எயினந்தை மகன் இளங்கீரனார்.
|
295. நெய்தல் |
முரிந்த சிலம்பின் நெரிந்த வள்ளியின், |
||
புறன் அழிந்து ஒலிவரும் தாழ் இருங் கூந்தல் |
||
ஆயமும் அழுங்கின்று; யாயும் அஃது அறிந்தனள், |
||
அருங் கடி அயர்ந்தனள், காப்பே; எந்தை, |
||
5 |
வேறு பல் நாட்டுக் கால் தர வந்த, |
|
பல வினை நாவாய் தோன்றும் பெருந் துறை, |
||
கலி மடைக் கள்ளின் சாடி அன்ன, எம் |
||
இள நலம் இற்கடை ஒழியச் |
||
சேறும்; வாழியோ! முதிர்கம் யாமே. | உரை | |
தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது; சிறைப்புறமும் ஆம்.- ஒளவையார்
|