முகப்பு |
ஆம்பல் |
280. மருதம் |
'கொக்கினுக்கு ஒழிந்த தீம் பழம், கொக்கின் |
||
கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பல் |
||
தூங்கு நீர்க் குட்டத்து, துடுமென வீழும் |
||
தண் துறை ஊரன் தண்டாப் பரத்தமை |
||
5 |
புலவாய்' என்றி-தோழி!-புலவேன்- |
|
பழன யாமைப் பாசடைப் புறத்து, |
||
கழனி காவலர் சுரி நந்து உடைக்கும், |
||
தொன்று முதிர் வேளிர், குன்றூர் அன்ன என் |
||
நல் மனை நனி விருந்து அயரும் |
||
10 |
கைதூவு இன்மையின் எய்தாமாறே. | உரை |
வாயில் வேண்டிச் சென்ற தோழிக்குத் தலைமகள் மறுத்து மொழிந்தது; தலைமகனை ஏற்றுக்கொண்டு வழிபட்டாளைப் புகழ்ந்து புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்.- பரணர்
|
290. மருதம் |
வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக் |
||
கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில் |
||
ஓய்நடை முது பகடு ஆரும் ஊரன் |
||
தொடர்பு நீ வெஃகினை ஆயின், என் சொல் |
||
5 |
கொள்ளல்மாதோ, முள் எயிற்றோயே! |
|
நீயே பெரு நலத்தையே; அவனே, |
||
'நெடு நீர்ப் பொய்கை நடு நாள் எய்தி, |
||
தண் கமழ் புது மலர் ஊதும் |
||
வண்டு' என மொழிப; 'மகன்' என்னாரே. | உரை | |
பரத்தை விறலிமேல் வைத்துத் தலைமகளை நெருங்கிச் சொல்லியது; பரத்தையிற்பிரிய, வாயிலாய்ப் புக்க பாணன் கேட்ப, தோழி சொல்லியதூஉம் ஆம்.-மதுரை மருதன் இளநாகனார்
|
300. மருதம் |
சுடர்த் தொடிக் கோமகள் சினந்தென, அதன் எதிர் |
||
மடத் தகை ஆயம் கைதொழுதாஅங்கு, |
||
உறு கால் ஒற்ற ஒல்கி, ஆம்பல் |
||
தாமரைக்கு இறைஞ்சும் தண் துறை ஊரன்- |
||
5 |
சிறு வளை விலை எனப் பெருந் தேர் பண்ணி, எம் |
|
முன் கடை நிறீஇச் சென்றிசினோனே! |
||
நீயும், தேரொடு வந்து பேர்தல் செல்லாது, |
||
நெய் வார்ந்தன்ன துய் அடங்கு நரம்பின் |
||
இரும் பாண் ஒக்கல் தலைவன்! பெரும் புண் |
||
10 |
ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண், |
|
பிச்சை சூழ் பெருங் களிறு போல, எம் |
||
அட்டில் ஓலை தொட்டனை நின்மே. | உரை | |
வாயில் மறுத்தது; வரைவு கடாயதூஉம் ஆம், மாற்றோர் நொதுமலாளர் வரைவின் மேலிட்டு. மருதத்துக் களவு - பரணர்
|
345. நெய்தல் |
கானற் கண்டல் கழன்று உகு பைங் காய் |
||
நீல் நிற இருங் கழி உட்பட வீழ்ந்தென, |
||
உறு கால் தூக்க, தூங்கி ஆம்பல், |
||
சிறு வெண் காக்கை ஆவித்தன்ன, |
||
5 |
வெளிய விரியும் துறைவ! என்றும், |
|
அளிய பெரிய கேண்மை நும் போல், |
||
சால்பு எதிர்கொண்ட செம்மையோரும் |
||
தேறா நெஞ்சம் கையறுபு வாட, |
||
நீடின்று விரும்பார் ஆயின், |
||
10 |
வாழ்தல் மற்று எவனோ? தேய்கமா தெளிவே! | உரை |
தெளிவிடை விலங்கியது.-நம்பி குட்டுவனார்
|