முகப்பு |
குறிஞ்சி |
268. குறிஞ்சி |
சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க, |
||
மால் பெயல் தலைஇய மன் நெடுங் குன்றத்து, |
||
கருங் காற் குறிஞ்சி மதன் இல் வான் பூ, |
||
ஓவுக் கண்டன்ன இல்வரை இழைத்த |
||
5 |
நாறு கொள் பிரசம் ஊறு நாடற்குக் |
|
காதல் செய்தவும் காதலன்மை |
||
யாதனிற்கொல்லோ?- தோழி!- வினவுகம், |
||
பெய்ம் மணல் முற்றம் கடி கொண்டு |
||
மெய்ம் மலி கழங்கின் வேலற் தந்தே. | உரை | |
தலைமகட்குச் சொல்லியது; தலைமகன் வந்தொழுகவும் வேறுபாடு கண்டாள், 'அவன் வருவானாகவும் நீ வேறுபட்டாய், வெறி எடுத்துக் கொள்ளும் வகையான்' என்றதூஉம் ஆம்.-வெறி பாடிய காமக்கண்ணியார்
|
301. குறிஞ்சி |
'நீள் மலைக் கலித்த பெருங் கோற் குறிஞ்சி |
||
நாள்மலர் புரையும் மேனி, பெருஞ் சுனை |
||
மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண், |
||
மயில் ஓரன்ன சாயல், செந் தார்க் |
||
5 |
கிளி ஓரன்ன கிளவி, பணைத் தோள், |
|
பாவை அன்ன வனப்பினள் இவள்' என, |
||
காமர் நெஞ்சமொடு பல பாராட்டி, |
||
யாய் மறப்பு அறியா மடந்தை- |
||
தேம் மறப்பு அறியாக் கமழ் கூந்தலளே. | உரை | |
சேட்படுத்து, 'பிரிவின்கண் அன்பின் இயற்கையில் தகுவகையதோர் ஆற்றாமையி னான்' என்று, தோழி தன்னுள்ளே சொல்லியது.-பாண்டியன் மாறன் வழுதி
|