முகப்பு |
கோங்கு |
48. பாலை |
அன்றை அனைய ஆகி, இன்றும், எம் |
||
கண் உளபோலச் சுழலும்மாதோ- |
||
புல் இதழ்க் கோங்கின் மெல் இதழ்க் குடைப் பூ |
||
வைகுறு மீனின் நினையத் தோன்றி, |
||
5 |
புறவு அணி கொண்ட பூ நாறு கடத்திடை, |
|
கிடின்என இடிக்கும் கோல் தொடி மறவர் |
||
வடி நவில் அம்பின் வினையர் அஞ்சாது |
||
அமரிடை உறுதர, நீக்கி, நீர் |
||
எமரிடை உறுதர ஒளித்த காடே. | உரை | |
பிரிவு உணர்த்திய தலைவற்குத் தோழி சொல்லியது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ
|
86. பாலை |
அறவர், வாழி-தோழி! மறவர் |
||
வேல் என விரிந்த கதுப்பின் தோல |
||
பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும் |
||
கடும் பனி அற்சிரம், நடுங்க, காண்தகக் |
||
5 |
கை வல் வினைவன் தையுபு சொரிந்த |
|
சுரிதக உருவின ஆகிப் பெரிய |
||
கோங்கம் குவி முகை அவிழ, ஈங்கை |
||
நல் தளிர் நயவர நுடங்கும் |
||
முற்றா வேனில் முன்னி வந்தோரே! | உரை | |
குறித்த பருவத்தின்வினைமுடித்து வந்தமை கேட்ட தோழி தலைவிக்கு உரைத்தது.-நக்கீரர்
|
202. பாலை |
புலி பொரச் சிவந்த புலால் அம் செங் கோட்டு |
||
ஒலி பல் முத்தம் ஆர்ப்ப, வலி சிறந்து, |
||
வன் சுவல் பராரை முருக்கி, கன்றொடு |
||
மடப் பிடி தழீஇய தடக் கை வேழம், |
||
5 |
தேன் செய் பெருங் கிளை இரிய, வேங்கைப் |
|
பொன் புரை கவளம் புறந்தருபு ஊட்டும் |
||
மா மலை விடரகம் கவைஇ, காண்வர, |
||
கண்டிசின்-வாழியோ, குறுமகள்!-நுந்தை, |
||
அறுமீன் பயந்த அறம் செய் திங்கள் |
||
10 |
செல் சுடர் நெடுங் கொடி போல, |
|
பல் பூங் கோங்கம் அணிந்த காடே. | உரை | |
உடன் போகாநின்ற தலைமகன் தலைமகட்குச் சொல்லியது.-பாலை பாடிய பெருங் கடுங்கோ
|