முகப்பு |
விளம்பழம் |
12. பாலை |
விளம்பழம் கமழும் கமஞ்சூற்குழிசிப் |
||
பாசம் தின்ற தேய் கால் மத்தம் |
||
நெய் தெரி இயக்கம் வெளில்முதல் முழங்கும் |
||
வைகு புலர் விடியல் மெய் கரந்து, தன் கால் |
||
5 |
அரி அமை சிலம்பு கழீஇ, பல் மாண் |
|
வரி புனை பந்தொடு வைஇய செல்வோள், |
||
'இவை காண்தோறும் நோவர்மாதோ; |
||
அளியரோ அளியர் என் ஆயத்தோர்!' என |
||
நும்மொடு வரவு தான் அயரவும், |
||
10 |
தன் வரைத்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே. | உரை |
தோழி உடன்போக்கு அஞ்சுவித்தது.- கயமனார்
|
24. பாலை |
'பார் பக வீழ்ந்த வேருடை விழுக்கோட்டு |
||
உடும்பு அடைந்தன்ன நெடும் பொரி விளவின், |
||
ஆட்டு ஒழி பந்தின், கோட்டு மூக்கு இறுபு, |
||
கம்பலத்தன்ன பைம் பயிர்த் தாஅம் |
||
5 |
வெள்ளில் வல்சி வேற்று நாட்டு ஆர் இடைச் |
|
சேறும், நாம்' எனச் சொல்ல-சேயிழை!- |
||
'நன்று' எனப் புரிந்தோய்; நன்று செய்தனையே; |
||
செயல்படு மனத்தர் செய்பொருட்கு |
||
அகல்வர், ஆடவர்; அது அதன் பண்பே. | உரை | |
பொருட்பிரிவுக்கு உடன்பட்ட தோழியைத் தலைவி உவந்து கூறியது. -கணக்காயனார்
|