முகப்பு |
சிங்கம் (மடங்கல், அரிமா) |
57. குறிஞ்சி |
தடங்கோட்டு ஆமான், மடங்கல் மா நிரைக் |
||
குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தென, |
||
துஞ்சு பதம் பெற்ற துய்த் தலை மந்தி |
||
கல்லென் சுற்றம் கை கவியாக் குறுகி, |
||
5 |
வீங்கு சுரை ஞெமுங்க வாங்கி, தீம் பால் |
|
கல்லா வன் பறழ்க் கைந் நிறை பிழியும் |
||
மா மலை நாட! மருட்கை உடைத்தே- |
||
செங் கோல், கொடுங் குரல், சிறு தினை வியன் புனம் |
||
கொய் பதம் குறுகும்காலை, எம் |
||
10 |
மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே! | உரை |
செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது.-பொதும்பில் கிழார்
|
112. குறிஞ்சி |
விருந்து எவன்செய்கோ-தோழி!-சாரல் |
||
அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கைச் |
||
சுரும்பு இமிர் அடுக்கம் புலம்பக் களிறு அட்டு, |
||
உரும்பு இல் உள்ளத்து அரிமா வழங்கும் |
||
5 |
பெருங் கல் நாடன் வரவு அறிந்து, விரும்பி, |
|
மாக் கடல் முகந்து, மணி நிறத்து அருவித் |
||
தாழ் நீர் நனந் தலை அழுந்து படப் பாஅய், |
||
மலை இமைப்பது போல் மின்னி, |
||
சிலை வல் ஏற்றொடு செறிந்த இம் மழைக்கே? | உரை | |
பருவ வரவின்கண்ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.-பெருங்குன்றூர் கிழார்
|