முகப்பு |
அன்னம் |
73. பாலை |
வேனில் முருக்கின் விளை துணர் அன்ன |
||
மாணா விரல வல் வாய்ப் பேஎய் |
||
மல்லல் மூதூர் மலர்ப் பலி உணீஇய, |
||
மன்றம் போழும் புன்கண் மாலை, |
||
5 |
தம்மொடும் அஞ்சும் நம் இவண் ஒழியச் |
|
செல்ப என்ப தாமே-செவ் அரி |
||
மயிர் நிரைத்தன்ன வார் கோல் வாங்கு கதிர்ச் |
||
செந்நெல்அம் செறுவின் அன்னம் துஞ்சும் |
||
பூக் கெழு படப்பைச் சாய்க்காட்டு அன்ன என் |
||
10 |
நுதற் கவின் அழிக்கும் பசலையும், |
|
அயலோர் தூற்றும் அம்பலும் அளித்தே. | உரை | |
செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைவி சொல்லியது.-மூலங்கீரனார்
|
356. குறிஞ்சி |
நிலம் தாழ் மருங்கின் தெண் கடல் மேய்ந்த |
||
விலங்கு மென் தூவிச் செங் கால் அன்னம், |
||
பொன் படு நெடுங் கோட்டு இமயத்து உச்சி |
||
வான் அரமகளிர்க்கு மேவல் ஆகும் |
||
5 |
வளராப் பார்ப்பிற்கு அல்கு இரை ஒய்யும் |
|
அசைவு இல் நோன் பறை போல, செல வர |
||
வருந்தினை-வாழி, என் உள்ளம்!-ஒரு நாள் |
||
காதலி உழையளாக, |
||
குணக்குத் தோன்று வெள்ளியின், எமக்குமார் வருமே? | உரை | |
வரைவு மறுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.- பரணர்
|