முகப்பு |
ஆலத்தூர் கிழார் |
112. குறிஞ்சி |
கௌவை அஞ்சின், காமம் எய்க்கும்; |
||
எள் அற விடினே, உள்ளது நாணே; |
||
பெருங் களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ |
||
நாருடை ஒசியல் அற்றே- |
||
கண்டிசின், தோழி!-அவர் உண்ட என் நலனே. |
உரை | |
வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - ஆலத்தூர் கிழார் |
350. பாலை |
அம்ம வாழி-தோழி!-முன் நின்று, |
||
'பனிக் கடுங்குரையம்; செல்லாதீம்' எனச் |
||
சொல்லினம்ஆயின், செல்வர்கொல்லோ- |
||
ஆற்று அயல் இருந்த இருங் கோட்டு அம் சிறை |
||
நெடுங் காற் கணந்துள் ஆள் அறிவுறீஇ, |
||
ஆறு செல் வம்பலர் படை தலைபெயர்க்கும் |
||
மலையுடைக் கானம் நீந்தி, |
||
நிலையாப் பொருட் பிணிப் பிரிந்திசினோரே? |
உரை | |
பிரிவு நேர்ந்த தலைமகள், அவனது நீக்கத்துக்கண் வேறுபட்டாளைத் தோழி வற்புறீஇயது. - ஆலந்தூர் கிழார். |