முகப்பு |
ஐயூர் முடவனார் |
123. நெய்தல் |
இருள் திணிந்தன்ன ஈர்ந் தண் கொழு நிழல், |
||
நிலவுக் குவித்தன்ன வெண் மணல் ஒரு சிறை, |
||
கருங் கோட்டுப் புன்னைப் பூம் பொழில் புலம்ப, |
||
இன்னும் வாரார்; வரூஉம், |
||
பல் மீன் வேட்டத்து என்னையர் திமிலே, |
உரை | |
பகற்குறியிடத்து வந்த தலைமகனைக் காணாத தோழி, அவன் சிறைப்புறத்தானாதல் அறிந்து, தலைமகட்குச் சொல்லியது. - ஐயூர் முடவன் |
206. குறிஞ்சி |
அமிழ்தத்தன்ன அம் தீம் கிளவி |
||
அன்ன இனியோள் குணனும், இன்ன |
||
இன்னா அரும் படர் செய்யும்ஆயின், |
||
உடன் உறைவு அரிதே காமம்: |
||
குறுகல் ஓம்புமின், அறிவுடையீரே! |
உரை | |
கழறிய பாங்கற்குக் கிழவன் உரைத்தது. - ஐயூர் முடவன் |
322. குறிஞ்சி |
அமர்க்கண் ஆமான் அம் செவிக் குழவி |
||
கானவர் எடுப்ப வெரீஇ, இனம் தீர்ந்து, |
||
கானம் நண்ணிய சிறுகுடி பட்டென, |
||
இளையர் ஓம்ப மரீஇ, அவண் நயந்து, |
||
மனை உறை வாழ்க்கை வல்லியாங்கு, |
||
மருவின் இனியவும் உளவோ? |
||
செல்வாம்-தோழி!-ஒல்வாங்கு நடந்தே. |
உரை | |
தலைமகன் வரவு உணர்ந்து தலைமகள் இயற்பட மொழிந்தது. - ஐயூர் முடவன் |