முகப்பு |
மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதன் |
90. குறிஞ்சி |
எற்றோ வாழி?-தோழி!-முற்றுபு |
||
கறி வளர் அடுக்கத்து இரவில் முழங்கிய |
||
மங்குல் மா மழை வீழ்ந்தென, பொங்கு மயிர்க் |
||
கலை தொட இழுக்கிய பூ நாறு பலவுக் கனி, |
||
வரை இழி அருவி உண்துறைத் தரூஉம் |
||
குன்ற நாடன் கேண்மை |
||
மென் தோள் சாய்த்தும் சால்பு ஈன்றன்றே. |
உரை | |
வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகட்கு, தலைமகன் சிறைப்புறமாகத்தோழி கூறியது. - மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதன் |
226. நெய்தல் |
பூவொடு புரையும் கண்ணும், வேய் என |
||
விறல் வனப்பு எய்திய தோளும் பிறை என |
||
மதி மயக்குறூஉம் நுதலும், நன்றும் |
||
நல்லமன்; வாழி-தோழி!-அல்கலும் |
||
தயங்கு திரை பொருத தாழை வெண் பூக் |
||
குருகு என மலரும் பெருந் துறை |
||
விரிநீர்ச் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே. |
உரை | |
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- மதுரை எழுத்தாளன் சேந்தம் பூதன் |