இங்கு, ‘ஐப்பசி’ என்பதற்கு, ஐப்பசி அஷ்டமியென்று பொருள்கொண்டது,
‘ஐப்பசி மதியமுன்ன ரட்டமிப் பக்கம்’ என்னும் (யசோ.130-ஆம்) கவியை நோக்கி
சிறப்பென்றது-திருவிழாவை; ‘சிறப்பொடு பூசனை செல்லாது‘ என்பது அறிக. ‘ஒன்றலா‘
என்பது பலவகை என்றபடி. ‘சிறப்பது‘ என்பதில் ‘அது,‘ பகுதிப்பொருள் விகுதி.
(11)
இதுவுமது
16. |
நோவு செய்திடு நோய்பல வாக்கிடும் |
|
ஆவி கொள்ளும் அலாதன வுஞ்செயும் |
|
தேவி சிந்தை சிதைந்தனள் சீறுமேல் |
|
காவல் மன்ன கடிதெழு கென்றனர். |
(இ-ள்.)
காவல்மன்ன-(எங்களைக்) காத்தலில் வல்லவனான அரசே, தேவி சிந்தை சிதைந்தனள் சீறும்
ஏல்-சண்டமாரி மணம் வேறுபட்டு வெகுளுவாளாயின், நோவு செய்திடும் நோய் - (நம் உடலுக்குத்)
துன்பந்தரும் நோய்கள், பல ஆக்கிடும்-பலவற்றையும் உண்டுபண்ணுவாள்;ஆவி கொள்ளும- உயிரையுங் கொள்ளைகொள்ளுவாள்; அலாதனவுஞ் செயும்-இவையல்லாத
மற்ற எல்லாத்தீங்குகளையும் செய்வாள்;(ஆதலின்), கடிது எழுக-(அத்தேவியின் சிறப்புச்
செய்தற்கு) விரைந்து புறப்படுவீராக, என்றனா-என்று கூறினர். (எ-று.)
நமக்குத் தீங்கு நேராவகை காத்தல் வேண்டி அத்தேவிக்குச்
சிறப்புச்செய்ய விரைந்தெழுக என்றரென்க.
நோவுசெய்திடும், நோய் பலவாக்கிடும் என்று தனித் தனிவாக்கியமாகப்
பொருளுரைப்பினு மமையும். அலாதன-பகை, போர், மழையின்மை முதலியன வாகும். சிதைந்தனள்,
முற்றெச்சம், ஏல் என்பது எனில் என்பதன் மரூஉ. எழுகென்றனர், அகரம் தொகுத்தல்
விகாரம்.
(12)
|