அரசன் தேவிபூசைக்குச் செல்லுதல்
17. |
என்று கூறலு மேதமி தென்றிலன்1 |
|
சென்று நல்லறத் திற்றெளி வின்மையால் |
|
நன்றி தென்றுதன் நன்னக ரப்புறத் |
|
தென்றி சைக்கட் சிறப்பொடு சென்றனன். |
(இ-ள்,)
(தேவியின் விழாவிற்கு எழுக), என்று கூறலும் - என்று (ஏனைமாந்தர்) கூறியதும், (அரசன்),
நல் அறத்திற்சென்று தெளிவு இன்மையால்-திருவறத்தின் முறைப்படி சென்று நற்காட்சி
பெற்றிலனாதலின், இது ஏதம் என்றிலன்-இச்செய்கை குற்றமாகுமென்று கூறாதவனாகி, இது----நன்று
என்று-நலமென்றுகருதி, தன்--- நல்நகரப்புறம்-இராசமாபுரத்தின் புறத்தே, தென் திசைக்கண்
- தெற்குத் திக்கிலுள்ள அத் தேவிகோயிலுக்கு, சிறப்போடு சென்றனன்-(தனக்குரிய)
சிறப்புடன் சென்றான்.(எ-று,)
திருவறத்தை மேற்கொண்டு தெளிதலாகிய நற்காட்சி யின்மையால்,
தேவிக்குச் சிறப்புற செய்யாவிடில் தீங்கு விளையும் என்ற ஏனைமாந்தர்கூற்றிற்கு மகிழ்ந்து
அரசன் உடன்பட்டுச்செல்வானாயின னென்க..
அரசன்,
தேவிபூசையை ‘நன்றிது‘ என்றது, நற்காட்சியைப் பெறாது தடுக்குங் குற்றங்களுள் ஒன்றாகிய
தேவமூடமாகும். தெளிவு-சம்யக்தரிசனம்; நற்காட்சி*.
குடைகொடி முதலிய அரசச்சின்னமுடன் சென்றான் என்ப-தற்குச் ‘சிறப்பொடு‘ சென்றனன்
என்றார். இனி, ‘சிறப்பொடு‘ என்பதற்குச், சிறப்பிற்கு உரிய பொருளகளோடு
எனினுமாம். இப்பொருளில், ‘சிறப்பு‘ ஆகுபெயர்
1
|
தென்றலன். |
* |
யசோ. 61-ல் காண்க |
|