சண்டகருமன்
தேடிச் சென்றபோது
அந்நகர்ச் சோலையின்கண் முனிவர்சங்கம்
வருதல்
23. |
ஆயிடைச் சுதத்த னைஞ்ஞூற் றுவரருந்
தவர்க ளோடுந் |
|
தூயமா தவத்தின் மிக்க வுபாசகர் தொகையுஞ் சூழச் |
|
சேயிடைச் சென்றோர் தீர்த்த வந்தனை செய்யச் செல்வோன் |
|
மாயமில் குணக்குன் றன்ன மாதவர்க் கிறைவன் வந்தான். |
(இ-ள்.) ஆயிடை-அப்பொழுது, (அந்நகர்ச்சோலையின்
கண்), மாயம் இல் - மாயம் முதலிய குற்ற மில்லாத, குணக்குன்று அன்ன - நற்குணங்களால் மலையொத்த, மாதவர்க்கு இறைவன் - அரியதவம்புரியும் முனிவர்களுக்குத் தலைவரும், தூய
மாதவத்தின் மிக்க - தூய்மையான அருந்தவத்தில் மிக்கவருமாகிய சுதத்தன் - சுதத்தாசாரியரென்பவர்,
அருந்தவர் ஐஞ்ஞூற்றுவர்களோடும்-அரியதவஞ் செய்யும் ஐந்நூறு முனிவர்களுடன், உபாசகர்
தொசையுஞ் சூழ - சிராவகர் கூட்டமும்(தம்மைச்) சூழ்ந்துவர, சேயிடைச் சென்று - நெடுந்தூரஞ்சென்று,
ஓர் தீர்த்தவந்தனை செய்ய - ஒப்பற்ற தீர்த்தஸ்தானங்களை வழிபடும் பொருட்டு,
செல்வோன் - செல்பவராய், வந்தான் - வந்தார்.(எ-று.)
நற்குணங்கள் நிறைந்த சுதத்தாசாரியர், ஐந்நூறு நிர்க்ரந்த
முனிவர்களும், சிராவகர்களும் ஆகிய சங்கமுடன் அவ்விராசமாபுரத்து வழியாக வந்தாரென்க.
ஓர் உடை உடுத்தவர் - மனைதுறந்து
தவவேடம் பூண்ட சிராவகர் எனவும், உபாசகர் எனவும் வழங்கப்படுவர்; (விவரம், ஸ்ரீபுராணம்.
சீதளர். 229 ஆம்-பக்கத்தில்காண்க) உடையே உடுக்காதவர் - திகம்பரரெனவும், நிர்க்ர்ந்த
தபோதனர் எனவும் வழங்கப்படுவர். அவரையே ஈண்டு அருந்தவர் என்றார். மாயமில் குணக்குன்றன்னவரும்,
மாதவர்க்கிறைவரும் தூயமா தவத்தின் மிக்கவருமான சுதத்தர் என்க. உபாசகர் மிகப்
பலராதலின், ‘உபாசகர் தொகையும்‘ என்றார். தீர்த்தவந்தனை யென்பது-நற்கதி யடைந்த
நற்றவர், கைவல்யமடைந்த தீர்த்
|