s

 

- 35 -

‘என்ற அருங்கலச்செப்பின்படி மனைதுறந்த சிராவக ரெனவறிக.  தம் சங்கத்துள்ளாரைச் சிட்சிப்பதும் இரட்சிப்பதும் தலைவர்கடமை யாதலின்,  ‘சரிகைபோகி நம்மிடைவருக‘ என்றார். வம்மின், ஏவற்பன்மை.  நற்றவற்றொழுது, இரண்டாம் வேற்றுமைத் தொகை.                    (22)

இளைஞர் சரிகை செல்லுதல்

27. வள்ளிய மலருஞ் சாந்தும் மணிபுனை கலனு மின்றாய்
  வெள்ளிய துடையோன் றாகி வென்றவ ருருவ மேலார்
  கொள்ளிய லமைந்த கோலக் குல்லக வேடங் கொண்ட
  வள்ளலு மடந்தை தானும் வளநகர் மருளப் புக்கார்.

(இ-ள்.) வள்ளிய மலரும்-நெருங்கத்தொடுத்த மலர் மாலையும், சாந்தும் - கலவைச் சாந்தும், மணி புனை கலனும் - மணிகள் பதித் தியற்றிய அணிகலன்களும், (ஆகிய இவற்றில் எதுவும்), இன்றாய்- இல்லாததாகி, வெள்ளியதுஉடை ஒன்றாகி - வெள்ளை ஆடை ஒன்றுமாத்திரம் (உடுக்குமாறு) உளதாகி, வென்றவர் உருவம் - ஐம்பொறிகளையும் வென்ற இறைவனின் உருவத்தை, ஏலார் - ஏலாதவராய், கொள் இயல் அமைந்த - தாம் கொண்ட இல்லறவியலுக்கு (ஏற்ப) அமைந்த, கோலம் - அழகிய, குல்லக வேடம் - க்ஷுல்லக வேடத்தை, கொண்ட - மேற்கொண்ட, வள்ளலும் - அபயருசியும் ,  மடந்தை தானும்-அபயமதியும், வளநகர் மருள - அவ் விராசமா புரத்திலுள்ளார் கண்டு வியப்பெய்துமாறு, புக்கார் - புகுந்தார்.

மலருஞ் சாந்தும் கலனும் நீத்து, தூயவெள்ளாடை ஒன்றைமட்டும் உடுத்த இளைஞரிருவரும் சரிகைக்காகச்செல்வாராயினர் என்க.

இனி, புக்கார் என்பதனை முற்றெச்சமாக்கி, புகுந்து என்ற பொருள் கொண்டு, முன்வருஞ் செய்யுளில் (யசோ. 28-இல்) நடந்தனர் என்பதனோடு இயைத்துக் கூறினும் அமையும்.