இவர்களால்
அழியுமாயின் நாம் வருந்தவேண்டிய தென் ?‘ என்பான், ‘இவரின் எய்தி னங்கதற்
கழுங்க லென்னை ‘ என்றான். உடலின்பற்றையே துறந்தவர் வேறு பற்றினையடையார் என்ற
பொருள் தோன்றுவ தறிக. ‘மற்றுந் தொடர்ப்பாடெவன் கொல் பி்றப்பறுக்கலுற்றார்க்குடம்
புமிகை‘ என்றார் (குறள் 345) தேவரும். அழுங்கல்-அச்சம் எனினுமாம். ‘ஜடப்பொருளான
உடல், அறிவுகாட்சி மயமான நம் உயிரின் தன்மையாகாது‘ என்பான் ‘அது நமதன்று‘ என்றான்.
‘உடம்பு நமதன்று‘ என்ற எண்ணும் பாவனை அனுப்ரேக்ஷை பன்னிரண்டனுள் அன்யத்வம் எனப்படும்.
அனுப்ரேக்ஷை பன்னிரண்டாவன;-1. அநித்யம், 2. அசரணம், 3.சம்ஸாரம், 4. ஏகத்வம்,
5.அன்யத்வம், 6. அசுசித்வம், 7.ஆஸ்ரவம், 8.ஸம்வரை, 9.நிர்ஜ்ஜரை, 10. லோகம்,
11.போதிர் துர்லபம், 12.தர்மஸ்வாக்யானம் என்பன. ‘சேதனமாலாவி யசேதனமாலிவ்வுடம்பு,
ஆதலின் வேறாய அவ்விரண்டுஞ் சேர்தலினால், மன்னுமொன்றாய் விடினும் வாளுந்தடறும்
போல், பின்னமெனவே பிரித்துணர்மின்‘ என்றார் (திருக்கலம்.72) உதீசிதேவரும்.
அங்கு, அசை. (28)
33. |
அஞ்சின மெனினு மெய்யே யடையபவந்
தடையு மானால் |
|
அஞ்சுத லதனி னென்னை பயனமக் கதுவு
மன்றி் |
|
அஞ்சுதற் றுன்பந் தானே யல்லது மதனிற் சூழ்ந்த |
|
நஞ்சன1 வினைக ணம்மை நாடொறு நலியு மென்றான். |
(இ-ள்.)
அஞ்சினம் எனினும் - (வரக்கடவதாகியதுன்பங்களைக்குறித்து)
அஞ்சினே மாயினும், அடைப-(நம்மைவந்து) சேருபவை, மெய்யே வந்து சேரும் - தப்பாமல்
வந்து சேரும்; ஆனால்-அங்ஙனமாயின், அதனின்-அவ்வாறு அடைதலைக்குறித்து அஞ்சுதல்-அஞ்சுதலால்,
நமக்கு -, பயன் என்னை-பயன்யாது ?’ அதுவுமன்றி-அதுவேயுமன்றி, அஞ்சுதல்
துன்பம் தானே-அஞ்சுவதும் துன்பமே, அல்லதும்-அது வன்றியும், அதனில்சூழ்ந்த - அவ்வச்சத்தால்
நம் உயிரைச் சூழ்ந்த,
|