35. |
கறங்கென வினையி னோடிக் கதியொரு
நான்கி னுள்ளும் |
|
பிறந்தநாம் பெற்ற பெற்ற பிறவிகள்
பேச லாகா |
|
இறந்தன
விறந்து போக வெய்துவ தெய்திப் பின்னும் |
|
பிறந்திட
விறந்த தெல்லா மிதுவுமவ் வியல்பிற் றேயாம். |
(இ-ள்.)
கறங்கு
என-காற்றாடிபோல, வினையின்-வினைகளினால், கதியொரு நான்கின் உள்ளும்-நான்கு கதியிலும்,
ஓடி-சுழன்றோடி, பிறந்தநாம்-பிறந்த ஆன்மாவாகிய நாம், பெற்ற பெற்ற பிறவிகள்-அடைந்த
பல பிறவிகளையும், பேசல் ஆகா-(இத்துணை யென்று அளவிட்டுக்) கூறவியலா; இறந்தன இறந்து
போக-கழிந்த பிறவிகள் (பல) கழிய, எய்துவது எய்தி-எய்தக்கடவதாகிய வினையை யெய்தி,
பின்னும் பிறந்திட எல்லாம் இறந்தது-மீண்டும் பிறக்க இப்படியே எல்லாப் பிறவியும்
கடந்தது (ஆதலின்), இதுவும்-இப்பொழுதுள்ள இப்பிறவியும், அவ்விய ல்பிற்றேயாம்-அத்தகையதே
(மீண்டும் பிறப்பதற்கே வழி) யாம் (எ-று.)
நாம்
எடுத்த பிறவிகள் எண்ணில; அவையெல்லாம் கழிந்தன. அவற்றைப் போன்றே இப்பிறவியும்
கழியப்போகின்றது என்றானென்க.
கறங்கு-காற்றாடி;
சுழலுந்தன்மையது. காற்றாடி உயிருக்கும், காற்று வினைகளுக்கும் உவமையாயின. காற்றினால்
காற்றாடி சுழலுவதுபோல, வினைகளினால் உயி்ர் மீண்டும் மீண்டும் பிறந்து சுழல்கிறது.
கதி
நான்குவகை; அவை-நாகர், விலங்கு, மக்கள், தேவர் என்பனவாம். இதனை ‘நானெறிவகை‘
என்று தொடங்குஞ் (சீவக.374) செய்யுளாலறிக. இடைவிடாது மீட்டும் மீட்டும் சென்று
பிறப்பதனால், ‘ஓடி’ என்றார். ‘வினைக்காற்றினால் கதி நான்கிற் சுழலுமே‘ என்றார்,
வாமன முனிவரும். இந்நான்கு கதியினுக்கும் மேற்பட்டது மோக்ஷகதி; அது ஐந்தாவது கதியாகும்.
‘பஞ்சம கதியிற் சென்ற பரமன்‘ என்றார் (மேரு 141-ல்) வாமனமுனிவரும்.
|