இவ்வாசிரியரே கூறுவதனாலும் அறிக.
‘மகுடகோடி‘என்றது, எண்ணற்ற தேவரை உணர்த்திற்று. தேவர்களாய்ப் பிறந்திடினும் நிலைபெற்ற
வின்பத்தினை யடையாதவராய் ஆயுள்முடிவில்மரண மெய்துவர் என்பதனை, தேவர்க்ளுக் கிறைவனான
தேவேந்திரன்மீது வைத்து, ‘இமையவ ரிறைவரேனும்‘ என்றார். விபவம்-வாழ்வுக் குரிய
செல்வம். உருவம் - உடலின் உருவம். பொன்றல் - அழிதல்; தேவர்கள் மரண மடைவதற்குப்
பதினைந்துநாள் முன்னரே உடல்நலம் முதலியன வாடித்துன்புறுவர் ஆதலின் ‘தளர்ந்தனர்‘
என்றார்.
|
“எல்லைமூ வைந்து நாள்க ளுளவென
விமைக்குங் கண்ணும் |
|
நல்லெழின் மாலை வாடு நஞ்சுடை
யமிர் துண் டாரிற் |
|
பல்பகற் றுய்த்த வின்பம் பழுதெனக்
கவல்ப கண்டாய்” |
என்றார்
(சீவக. 2810) திருத்தக்கதேவரும். “இந்திர விபவமேனும் நின்ற தொன்றில்லை யர்£க்கும்”
(மேரு.204) என்று கூறியது ஈண்டு ஒப்பிடற் பாலதாகும்.இறைவரேனும், உம்மை - உயர்வுசிறப்பு.
(38)
43. |
மக்களின் பிறவி யுள்ளும் மன்னர்தம்
மன்ன ராகித் |
|
தி்க்கெலா மடிப்ப டுத்துந் திகிரியஞ் செல்வ ரேனும் |
|
அக்குலத் துடம்பு தோன்றி யன்றுதொட்
டின்று காறும் |
|
ஒக்கநின் றார்கள் வையத் தொருவரு
மில்லை யன்றே. |
(இ-ள்.)
வையத்து - நிலவுலகின், மக்களிற் பிறவியுள்ளும் - மக்கட்பிறவியுள்ளும், மன்னர்தம்
மன்னராகி -அரசர்க் கரசராய், திக்கு - எலாம் அடிப்படுத்தும் - எட்டுத் திக்கிலுள்ள
வேந்தரையும் தம் அடிக்கீழ்ப் பணியச் செய்யும், திகிரி - சக்ர
ரத்தினத்தைக் கொண்ட, அம்செல்வரேனும் - அழகிய விபவங்களையும்பெற்றவராயசக்கிரவர்த்திகளாயினும்,
அக்குலத்து உடம்பு தோன்றி -அவ்வுத்தமகுலத்துப் பிறந்து, அன்றுதொட்டு இன்றுகாறும் -
அன்றுமுதல் இன்றுவரையிலும், ஒக்க நின்றார்
|