உறுதி மொழி, என்னை - ஏன் ?
என்றாள் - என்று அபயமதி கூறினாள். (எ-று.)
அண்ணலே, இவ்வுடலும் உடலைச் சார்ந்த
பொருளும் நமது என்று எண்ணுமவர்க்கே நீர் கூறிய அறவுரை பொருத்தமாகும்; பற்றறரத் துறந்த
நமக்கு வேண்டாஎன்றன ளென்க.
‘ஆகும்‘ என்று ஒரு சொல் வருவிக்க.
அருளிற்று-அருளிச் செய்தது. மெய்-உடல். இவ்வுடல், [மூளை
“எலும்புதோல் ஈருள் வெண்ணஞ்சூன்
குடலர்மலங்கண் |
கலந்தநெய்த்தோர் நரம்பு வழுப்பிவை வேறுகண்டால் |
விலங்கிமேற் சேரலின்றி வெறுத்துமிழ்ந் துவர்த்து”* |
விடு மியல்பினதாத லானும்,
“துன்னும், புழுப்பிண்டமாகிப் புறஞ்செய்யுந்
தூய்மை |
விழுப்பொருளை வீறழிப்பதாகி -
அழுக்கொழுகு |
மொன்பது வாயிற்றா மூன்குரம்பை”
1 ஆதலானும் |
‘அருவருப் புடைய மெய’ என்றார்.
உறுதி - உறுதிப் பொருள்; வீடு பேற்றிற்குரிய அறப்பொருள். விண் - தேவருலகம்.
தேவசுகமும் பிறவிக்கு ஏது வாகலின், ‘விண்ணின்மே லின்ப மல்லால் விழைபயன்‘ என்றார்.
இங்ஙனே, ‘விண்ணின்மே லின்பமே விழைந்த வேட்கையான்‘ 2என்று
சிந்தாமணியாரும் கூறினார், ‘வானோர்க்குயர்ந்த வுலகம் புகும’ 3
என்று தேவர்கூறியதும் இக்கருத்தே யென்ப. முன்னரே பற்றற்றுத் துறவு பூண்டவராதலால்,
‘வெறுத்து நின்ற’ என்று இறந்தகாலத்தாற்கூறினார். விழைவு - ஆசைப்பெருக்கம். கட்டுரை
- உறுதி மொழி. என் - என்று எண்ணுகின்ற. என்னை, யாது பயன். அருளிற்றெல்லாம்
என்றது, யசோ. 32 முதல் 44 - வரை கூறியதனை. இனி, ‘விண்ணின்மே
லின்பமல்லால் விழைபயன் வெறுத்து நின்ற‘ என்ற தொடர், ‘நங்கட்கு‘ என்பதனோடு இயையாமல்,
அபயரு
* மேரு
857.
1
திருமங்கலம்-72.
2
சீவக.2742.
3
குறள் 346. |
|