சியைக் குறிக்குங் கண்ணனாய் என்பதனோடு
இயையும் எனினுமாம். அருளிற்றெல்லாம், என்பது ஒருமை பன்மை மயக்கம்; இனி அருளியது
- முழுவதும் எனலுமாம். ‘நண்ணிய‘ என்பது நண்ணியது என்பதன் விகாரம். ‘கருமுகில்...
... வருவபோற் கலுழன் மேல் வந்து‘ (கம்ப. திருவவ.) என்பது காண்க. (41)
இதுவுமது.
46. |
அருவினை விளையு ளாய1
அருந்துயர்ப் பிறவி தோறும் |
|
வெருவிய மனத்து நம்மை வீடில விளைந்த வாறுந் |
|
திருவுடை2
யடிக டந்த திருவறப் பயனுந் தேறி (டோ.) |
|
வெருவிநாம் விடுத்த வாழ்க்கை
விடுவதற் கஞ்ச லுண் |
(இ-ள்.)
அருவினை விளையுள் ஆய - தீவினைகளின் உதயத்தாலாய, அருந்துயர் பிறவி
தோறும் - தாங்கற்கரிய துயருறும் ஒவ்வொரு பிறவியிலும், வெருவிய மனத்து நம்மை -
நடுங்கிய மன முடைய நம்மை, வீடு இலவிளைந்த வாறும் - (அவ்வினைகள்) விடுதலன்றி (த்தொடர்ந்து)
பல இன்னல் விளைவித்த வாற்றையும், திருவுடைஅடிகள் தந்த - புண்ணிய மூர்த்தியான சுதத்தாசார்யர்
(அருளுடன்) தெரிவித்த, திருவறப்பயனும்-திருவறத்தினாலாகும் நன்மையினையும், தேறி -
தெளியவுணர்ந்து, நாம்--, வெருவி - (பிறவியின் சுழற்சிக்கு) அஞ்சி, விடுத்தவாழ்க்கை
- பற்றின்றி விடுத்த (நம்) வாழ்க்கையினை, விடுவதற்கு அஞ்சல் உண்டோ - விட்டு
நீக்குவதற்கு அஞ்சவேண்டயதுண்டோ? (இல்லையென்றபடி) (எ-று.)
வினைப்பயனும் அறப்பயனும்
தெளிந்தநாம் மரணத்திற்கு அஞ்சுவதுண்டோ? இல்லை என்றன ளென்க
பிறவிதோறும் விளைந்தவாறும் பயனும்
தேறிவெருவி விடுத்த வாழ்க்கை என இயைக்க. பொறிவாயிலால் ஈட்டிய தீவினைகள் அவ்வுயிருடன்
சேர்ந்து பந்த
1 பாடம். வினையுளாய,
2 திருவிடை
|
|