- 70 -

திற்கு வருவதாகும்.  இதனையே, ‘அருவினை விளையுளாய அருந்துயர்ப் பிறவிதோறும்‘ என்றார்.  பிறவிதோறும் - ஒவ்வொரு பிறவியிலும்.  மாமுனிவர்க் கன்றி மற்றை யோருக்கு அவ்வினைகள் பயனை அளித்தே ஏகுவதனால்’வீடு இல விளைந்த வாறும்‘ என்றாள்.  விளைதல் - உண்டாதல். வீடு இல - விடுதல் இல்லாதனவாய்.  திருவுடைஅடிகள், சதத்தாசார்யர்.  திரு - ஈண்டு ஞானச் செல்வம்; அவதி ஞானம் அடைந்தவராதலின்,  (யசோ.  274)

அவரை இவ்வாறு கூறினார். அடிகள் - முனிவர். ‘திருவுடையடிகள்‘ என்பதற்கு இறைவன் எனினுமாம். ஜீவகாருண்யத்தை மூலமாகக் கொண்ட   அறமாதலின்‘திருவறம்‘  என்றார்.

பயன் - வீடுபேறு.  வெருவுதல் - அஞ்சுதல்.  அடி, 2-ல் வெருவுதல், துன்பத்திற்கு அஞ்சுதல்.  அடி, 4-ல் வெருவுதல்,  துறவெண்ணத்தால் வினைகளுக்கு அஞ்சுதல்.  ‘வினைவசமாய விந்த வீறிலா வாழ்க்கை தன்னை, நினைதொறும் உள்ளம் நின்று நடுங்கிடும்‘  (மேரு - 800) என்பது காண்க.

‘அதுநமதன்றென் றன்றோ மனத்தினில் விடுத்தது ? என்று (யசோ 32ல்.) அபயருசி கூறியதற் கேற்ப, வெருவி நாம் விடுத்த வாழ்க்கை‘ என்று அபயமதி கூறியதுஅவள் உள்ளத்தின் மாட்சியினை  வெளிப்படுத்துகின்றது.

நம் பிறவிக்குக் காரணம் ஞானவரணீயம் முதலிய எட்டுவினைகளே; அவற்றுள் நாம, கோத்திர கர்மங்களினால் உடல் அடைவதும்,  வேதனீயகர்மத்தால் பயன் அடைவதும், ஆயுஷ்யகர்மத்தின் முடிவினால் மரண மெய்துவதும் அமைகின்றன; இத்தன்மையை,

“வினையெனுங் குயவன் நம்மை வேண்டுரு வியற்றல் கண்
[டாய
அனகனா முருவந்தன்னைப் பெண்ணுரு வாக்கி யங்கே
மனைவியை மகளு மாக்கி மகளையே மைந்த னாக்கி
நினைவினான் முடித்து நின்றார் நீதியார் கடக்க வல்லார்”

   என்று (மேரு. 462-ல்) கூறியதனா லறிக.                            (42)