- 75 -

உயிரினுருவமுள்ளி  அறப்பெருமை நாடி ஐம்பொறிவாயிலை வென்றவர்களைப் புகலாகவடைந்து நம் உடல்விட்டு நீங்குவாம் என்று அண்ணல் கூற, அபயமதியும்நேர்ந்தன ளென்க.

உருவம் என்றது ஈண்டு உடலளவாகப் பரவியுள்ளஉயிரின் சொரூபத்தினை;  ‘குடங்கையில் விளக்கெனக்கொண்ட கொண்டதன் னுடம்பின தளவுமாம’  (மேரு.81.) என்று கூறுதல் காண்க.  ஒன்றிய என்பது, பாலும் நீரும்போல ஒன்றாகத் தோன்றும் உயிர் உடலின் ஒற்றுமையினை.

  ‘ஒற்றுமை நயத்தில் ஒன்றெனத் தோன்றினும்
  வேற்றுமை நயத்தில் வேறே யுடலுயிர்‘

என்று (நன், எழு,சூ.451) கூறியிருப்பது காண்க.

உயிர் உடல் இரண்டும்  உருவத்தால் மட்டுமின்றி, குணத்தாலும் வேறு என்று  பிரித்துக்கூறி உயிரின்  தன்மையை நாம் அறியவேண்டும் என்பான்,  ‘வேறாம் உயிரினது உருவம் உள்ளி நன்றென நயந்து‘ என்றான். வென்றவர் - பஞ்சபரமேஷ்டிகள்.  சரணம் மூழ்கி என்றது-பக்தி பரவசனாகிப் பாதத்தில் படிந்து என்றபடி. ‘அருகன சரணமூழ்கி’ என்றார்  வாமன முனிவரும்.  உயிரின் உருவத்தை மனத்தாலறியலாமேயன்றி ஐம்பொறிகளாலறிய வியலாதாதலின் ‘உள்ளி‘என்றார்.  உள்ளுதல் - நினைத்தல்.

இருவரும் உயிரின்  இலக்கணம்  உன்னுதல்.

50. ‘அறிவொடா லோக முள்ளிட் டனந்தமா மியல்பிற் றாகி
  அறிதலுக் கரிய தாகி யருவமா யமல மாகிக் (வேறா
  குறுகிய தடற்றுள்  வாள்போற்  கொண்டிய லுடம்பின்
  யிறுகிய வினையு மல்ல தெமதியல் பென்று நின்றார்.‘

(இ-ள்.) எமது இயல்பு-எம்முடைய ஆத்ம சொரூபமானது.  அறிவொடு ஆலோகம் உள்ளிட்டு - அறிவையும் காட்சியையும் தன்னிடத்துக்கொண்டு,  அனந்தம்ஆம்