முதற்காரணமு மாதலின், ‘அறிவினில் தெளிந்தமாட்சி அரதனத்திரய
மென்னும் பெறுதலுக் கரிய செல்வம்‘என்றார். அறிவு-கேவல ஞானம். தெளிந்த-தெளியவுணர்ந்த.
மீண்டும் நழுவவிடாது நிகழ்வதனால், ‘பெரிதும் பெற்றனம்‘ என்றார். உம் பிரித்துக்கூட்டப்பட்டது.
இதுமுதல் ஐந்துகவிகளால் இளைஞரிவரும் பஞ்சபரமேஷ்டிகளை
வணங்குவதனைக் கூறுகின்றார்
சித்தர்
வணக்கம்
52. |
ஈங்குநம் மிடர்க டீர்க்கு மியல்பினார் நினைது மேலிவ் |
|
வோங்கிய வுலகத் தும்ப ரொளிசிகாமணியி
னின்றார் |
|
வீங்கிய கருமக் கேட்டின் விரிந்தவெண்
குணத்த ராகித் |
|
தீங்கெலா மகற்றி நின்ற சித்தரே
செல்லல் தீர்ப்பார். |
(இ-ள்.)
ஈங்கு-இவ்விடத்தே, நம் இடர்கள் தீர்க்கும் இயல்பினார் நினைதும் ஏல்-நமது பிறவித்
துன்பங்களைநீக்குந் தன்மையுடையாரைப் பற்றி (யாவரென)ஆராய்வோமாயின், இவ்வுலகத்து
ஒங்கிய உம்பர் - இம்மூவுலகத்திற்கும் மேலேயுள்ள உச்சியின்கண், ஒளி சிகாமணியின்
நின்றார் - ஒளியினை யுடைய முடிமணி போலவிளங்குகின்றவரும், வீங்கிய கருமக் கேட்டின்
- மிகுதியாகிய (ஞானவரணீயம் முதலிய எண்) வினைகளின் கேட்டினால், விரிந்த எண்குணத்தார் ஆகி - கடையிலாஞானம் முதலிய
எண்குணங்களும் விளங்கப்பெற்றவருமாகி, தீங்கு எலாம் அகற்றி நின்ற - எக்குற்றங்களும்
போக்கி நின்ற, சித்தரே - சித்தபரமேஷ்டிகளே, செல்லல் தீர்ப்பார் -நம்பிறவித்
துன்பத்தைநீக்குவார் (ஆதலின் அவரை வணங்குவம்). (எ-று.)
எண்வினையின் நீங்கி எண்குணங்கள் விளங்கிய சித்தரை வணங்கினரென்க.
இறைவனை நாம் வணங்குவதனால் நமக்கு யாதொருபயனும் அவரால்
அளிக்கப் படுதலில்லை; ஆயினும் அவரை
|