- 79 -

முதற்காரணமு மாதலின், ‘அறிவினில்  தெளிந்தமாட்சி அரதனத்திரய  மென்னும்  பெறுதலுக்  கரிய செல்வம்‘என்றார்.  அறிவு-கேவல ஞானம்.   தெளிந்த-தெளியவுணர்ந்த.  மீண்டும் நழுவவிடாது நிகழ்வதனால்,  ‘பெரிதும் பெற்றனம்‘  என்றார்.  உம் பிரித்துக்கூட்டப்பட்டது.

இதுமுதல்  ஐந்துகவிகளால்  இளைஞரிவரும்  பஞ்சபரமேஷ்டிகளை வணங்குவதனைக் கூறுகின்றார்

சித்தர் வணக்கம்

52.  ஈங்குநம் மிடர்க டீர்க்கு மியல்பினார்  நினைது மேலிவ்
  வோங்கிய வுலகத் தும்ப ரொளிசிகாமணியி னின்றார்
  வீங்கிய கருமக் கேட்டின்  விரிந்தவெண் குணத்த ராகித்
  தீங்கெலா மகற்றி நின்ற சித்தரே செல்லல்  தீர்ப்பார்.

 (இ-ள்.) ஈங்கு-இவ்விடத்தே, நம் இடர்கள் தீர்க்கும் இயல்பினார்  நினைதும் ஏல்-நமது பிறவித்  துன்பங்களைநீக்குந் தன்மையுடையாரைப் பற்றி  (யாவரென)ஆராய்வோமாயின், இவ்வுலகத்து ஒங்கிய  உம்பர் - இம்மூவுலகத்திற்கும் மேலேயுள்ள உச்சியின்கண்,  ஒளி சிகாமணியின் நின்றார் - ஒளியினை  யுடைய முடிமணி  போலவிளங்குகின்றவரும், வீங்கிய கருமக் கேட்டின் - மிகுதியாகிய (ஞானவரணீயம் முதலிய எண்) வினைகளின்  கேட்டினால்,  விரிந்த  எண்குணத்தார் ஆகி - கடையிலாஞானம் முதலிய எண்குணங்களும் விளங்கப்பெற்றவருமாகி,  தீங்கு எலாம் அகற்றி நின்ற - எக்குற்றங்களும் போக்கி நின்ற, சித்தரே - சித்தபரமேஷ்டிகளே,  செல்லல்  தீர்ப்பார் -நம்பிறவித் துன்பத்தைநீக்குவார்  (ஆதலின் அவரை வணங்குவம்).  (எ-று.)

எண்வினையின் நீங்கி  எண்குணங்கள்  விளங்கிய சித்தரை வணங்கினரென்க.

இறைவனை நாம் வணங்குவதனால்  நமக்கு  யாதொருபயனும்  அவரால்  அளிக்கப் படுதலில்லை;  ஆயினும் அவரை