என்று சூடாமணி நிகண்டு 12 74-.ல கூறியதனாலறியலாகும். இவ்வெண்
குணங்களை யுடைய இறைவனையே‘கோளிற் பொறியிற் குணமிலவே எண் குணத்தான் றாளைவணங்காத்
தலை‘ என்ற குறளில் தேவர் குறிப்பிட்டுள்ளார்.
மணியின் - இன், ஒப்பப் பொருளில் வந்தது. சித்தரே -
ஏகாரம் தேற்றம்; பிரிநிலையுமாம் சித்தரின் தன்மை கிரியாபுத்தகம் சித்த
பத்தியில் காண்க. (48)
அருகர்
வணக்கம்
53. |
பெருமலை
யனைய காதிப் பெரும்பகை பெயர்த்துப்பெற்ற |
|
திருமலி கடையி னான்மைத் திருவொடு
திளைப்பரேனும் |
|
உரிமையி னுயிர்கட் கெல்லா மொருதனி
விளக்கமாகித் |
|
திருமொழியருளுந் தீர்த்த கரர்களே
துயர்க டீர்ப்பார். |
(இ-ள்.)
பெருமலை அனைய - பெரிய மலையை நிகர்த்த, காதிப்பெரும் பகை பெயர்த்து-(தம் உயிருடன்
பொருந்தியுள்ள) காதிவினையாகிய பெரும் பகையை பேறு படுத்திவென்று, பெற்ற - அதனால்
பெற்ற, கடையில் நான்மை-அனந்த சதுஷ்டயத்துடன், திருமலி - (இந்திரன் இயற்றுவித்த
சமவசரணம் முதலிய) செல்வம் நிறைந்து, திருவொடு திளைப்பர் ஏனும் - மோட்சலட்சுமியின்
இன்பந் துய்ப்பவ ராயினும், உரிமையின் - (அயோகி குணஸ்தானத்தின்) முறைப்படி,
உயி்ர்கட்கு எல்லாம் - உயிர்க ளனைத்திற்கும், ஒரு தனி விளக்கம் ஆகி - தத்தம்
பாஷையில் விளக்கமாகத் தெரியும் வண்ணம், திருமொழி அருளும் - திவ்யத்வனியினால்
உபதேசஞ் செய்தருள்கின்ற,தீர்த்தகரர்களே - தீர்த்தங்கர பரமதேவர்களே,
துயர்கள் தீ்ர்ப்பார் - (நமது) பிறவித் துயர்களை நீக்குவதற்கு உரியர்; (ஆதலின்
அவர்களை வணங்குவம்). (எ-று.)
|