- 113 -

அபயருசியின் அறவுரை

67. மின்னொடு தொடர்ந்து  மேகம் மேதினிக் கேதம்  நீங்கப்
  பொன்வரை முன்னர்  நின்று புயல்பொழிந் திடுவதேபோல்
  அன்னமென் னடையி னாளு1  மருகணைந் துருகும் வண்ண
  மன்னவ குமரன்  மன்னற் கறமழை பொழிய  லுற்றான்

(இ-ள்.)மேகம் - மேகமானது,  மின்னொடு  தொடர்ந்து-ஓர்  மின்னலுடன்  தொடர்ந்து  சென்று,  மேதினிக்கு  ஏதம் நீங்க-உலகத்  துயிர்களுக்குத் துன்பம்  விலகுமாறு,  பொன்வரை முன்னர்  நின்று - பொன்மலையின்  முன் நின்று,  புயல் பொழிந்திடுவதே  போல்-நீரைப் பெய்வது போல, அன்னமெல்  நடையினாளும் - அன்னம் போல மெல்லிய நடையினையுடைய அபய மதியும், அருகு  அணைந்து-தன் பக்கத்தே சார்ந்து  நிற்ப, மன்னவ குமரன் - அரசகுமரனாகிய  அபயருசி,  உருகும் வண்ணம் - அங்கு குழுமி யிருப்போர்  உள்ளம் உருகும்படி, மன்னற்கு-மாரிதத்த வரசனுக்கு,  அறமழை  பொழியல் உற்றான்-அறவுரை  யாகிற  சொற்பொழிவை நிகழ்த்தத்  தொடங்கினான்.  (எ-று.)

மின்னல் விரவிய மேக மானது,  மேதினியிலுள்ளோரின் வருதத்தை நீக்கப் பொன் மலையினிடம்  (சென்று) மழை பொழிவது போல;  அபயருசி, அபயமதி  பக்கத்திலிருக்க மாரிதத்தனுக்கு  அற முரைத்தற்கு  ஆரம்பித்தனனென்க.

மேதினி-பூமி; ஆகுபெயர்.  மழையினால்  மேதினியிலுள்ள பயிர் முதலிய சகல வுயிர்களும் இன்ப  மெய்துவது போல;  இவ்வற மழையினால்  தருமப் பயிரானதுவளர்ந்து  விலங்கினமும் உய்வு பெற்று மானிடரும் தீயசெயலி னின்றும் விலகி  (கோபம் முதலிய) தாபம்  தணிவதற்குக் காரண  மாதலின்,  அற  வுரைக்கு  மழை  உவமையாயிற்று.  அபயருசியை  மேகமாகவும்,  அபயமதியை

 

1 பாடம் நடைய னாளு.