பொருந்தல்
,
தங்கல், நரைமயிர் முதுமையைக்
குறிக்கு மென்பதனை,
“மன்னனே யவனியை
மகனுக் கீந்துபின் |
பன்னருந் தவம்புரி
பருவ மீதெனக் |
கன்னமூ லத்தினிற்
கழற வந்தென |
மின்னெனக்
கருமைபோய் வெளுத்த தோம்யிர்” |
என்னும் கம்பர் (அயோத்) வாக்கானு மறியலாகும். உளைதல் -
மனம் நோதல், ‘நரைவரு மென்றெண்ணி நல்லறிவாளர் குழலியிடத்தே‘ துறப்பது, மரபும்
இயல்புமாதலின் அத்தகைய தானும் இதுவரை பிறவிப்பற்றிலழுந்திதவப்பேற்றை யடையாக்
குறைக்கு வருந்தி, ஆலோசித்தன னென்க. ஆலோசித்த வகையை மேல் வரும் கவிகளால் அறியலாகும். (6)
இளமை
நிலையாமை
79. |
வண்டளிர்
புரைதிரு மேனி மாதரார |
|
கண்டக லுறவரு
கழிய மூப்பிது |
|
உண்டெனி லுளைந்திக
லுருவ வில்லிதன் |
|
வண்டுள கணைபயன்
மனிதர்க் கென்றனன். |
(இ-ள்.)
வண்தளிர் புரை-வளவிய மாந்தளிர் போலும், திருமேனி மாதரார் - அழகிய மேனியையுடையமகளிர்,
கண்டு - பார்த்தவுடன், அகலுற - அருவருத்து நீங்கும்படியாக, வரு - வருகின்ற, கழிய மூப்பிது
- ஆண்டு மிக்க மூப்பாகிய இது, உண்டு எனில் - உளதாயின் அதுவரையிற்றான், உளைந்து
- மனம் திரிந்து, இகல், மாறுபாட்டினையுடைய, உருவவில்லி தன் - அழகிய (கரும்புவில்லையுடைய,
மன்மதனது, வண்டு உள கணை - வண்டுகள் மொய்க்கும் பூங்கணை, மனிதர்க்குப்பயன் - மக்கட்கு
காம வேட்கை யாகிய பயனை விளைவிக்கும், என்றனன் -‘ என்றுதனக்குள்ளே கூறிக்கொண்டான்.
(எ-று.)
|