- 127 -

இளமைச் செவ்வியே இன்பம், நுகர் தற்குரிய காலமாதலின்,  ‘இளையவளெழில் நலம் விழைந்து‘  என்றார். ஏந்து கொங்கை-மார்பிடம் ஏந்திய தனம் எனினுமாம். கிளையவர் அசோகன் முதலியோர். இதனால் அசோகனுக்கு யாதொரு குறையு மிலதாயிற் றென்க.

இதுமுதல் நான்கு கவிகளால் அசோகன் துறவெண்ணம்நிறைதல் கூறுகின்றார்.

78. மற்றோர்நாள் மன்னவன் மகிழ்ந்து கண்ணடி
  பற்றுவா னடிதொழ படிவ நோக்குவான்
  ஒற்றைவார் குழன்மயி ருச்சி வெண்மையை
  யுற்றுறா வகையதை யுளைந்து கண்டனன்.

யுற்றுறா வகையதை யுளைந்து கண்டனன்.(இ-ள்.) ஓர் நாள் - இவ்வாறு செல்லுங்  காலத்துஒரு நாள், கண்ணடி பற்றுவான் அடிதொழ - கண்ணாடி ஏந்திக் காட்டுவோன் அசோக மன்னனுக்கு  வணங்கிஎடுத்துக் காட்ட, மன்னவன் மகிழ்ந்து --, படிவம் நோக்குவான் - தன் வடிவத்தை கண்ணாடியில் காண்பவன், வார்குழல் - தனது நீண்ட தலைமயிரில், ஒற்றை  மயிர் உச்சி - ஒரு மயிரின் முனையில் (உள்ள), வெண்மையை உற்று - நரையைக் கண்டு, உறாவகை அதை - இளமை நிலையாமையையும், முதுமை வந்து விட்டதையும், உளைந்து கண்டனன் - மனம் வருந்தி அறிந்தனன். (எ-று.)

அசோகன், தனது நரைமயிர், முதுமையை உணர்த்தவருந்தினானென்க.

மகிழ்ச்சி - பெயரன் பிறந்து வளர்வதற்குத் தானும் மகிழ்தல்.  கண்ணாடி  ‘கண்ணாடி‘ என நின்றது விகாரம். (சீவக - 629,1082.) அரசரின் குற்றேவ லாளருள் கண்ணாடி ஏந்துவோர் ஒருவகையினர்.  படிவம் - வடிவம்.உச்சி - தன் சிரசின் உச்சி (யிலுள்ளமயிர்) எனினுமாம்.‘உறாவகை‘ (இளமை நிலையாகப்) பொருந்தாத  வகை, ‘அதை‘ குறிப்பால் மூப்பை உணர்த்திற்று.  ஊறுதல்-