இளமைச் செவ்வியே
இன்பம், நுகர் தற்குரிய காலமாதலின், ‘இளையவளெழில் நலம் விழைந்து‘ என்றார்.
ஏந்து கொங்கை-மார்பிடம் ஏந்திய தனம் எனினுமாம். கிளையவர் அசோகன் முதலியோர்.
இதனால் அசோகனுக்கு யாதொரு குறையு மிலதாயிற் றென்க.
இதுமுதல்
நான்கு கவிகளால் அசோகன் துறவெண்ணம்நிறைதல் கூறுகின்றார்.
78. |
மற்றோர்நாள்
மன்னவன் மகிழ்ந்து கண்ணடி |
|
பற்றுவா னடிதொழ
படிவ நோக்குவான் |
|
ஒற்றைவார்
குழன்மயி ருச்சி வெண்மையை |
|
யுற்றுறா வகையதை
யுளைந்து கண்டனன். |
யுற்றுறா
வகையதை யுளைந்து கண்டனன்.(இ-ள்.) ஓர் நாள் - இவ்வாறு செல்லுங் காலத்துஒரு நாள்,
கண்ணடி பற்றுவான் அடிதொழ - கண்ணாடி ஏந்திக் காட்டுவோன் அசோக மன்னனுக்கு வணங்கிஎடுத்துக்
காட்ட, மன்னவன் மகிழ்ந்து --, படிவம் நோக்குவான் - தன் வடிவத்தை கண்ணாடியில்
காண்பவன், வார்குழல் - தனது நீண்ட தலைமயிரில், ஒற்றை மயிர் உச்சி - ஒரு மயிரின்
முனையில் (உள்ள), வெண்மையை உற்று - நரையைக் கண்டு, உறாவகை அதை - இளமை நிலையாமையையும்,
முதுமை வந்து விட்டதையும், உளைந்து கண்டனன் - மனம் வருந்தி அறிந்தனன். (எ-று.)
அசோகன், தனது நரைமயிர், முதுமையை
உணர்த்தவருந்தினானென்க.
மகிழ்ச்சி - பெயரன் பிறந்து வளர்வதற்குத் தானும்
மகிழ்தல். கண்ணாடி ‘கண்ணாடி‘ என நின்றது விகாரம். (சீவக - 629,1082.)
அரசரின் குற்றேவ லாளருள் கண்ணாடி ஏந்துவோர் ஒருவகையினர். படிவம் - வடிவம்.உச்சி
- தன் சிரசின் உச்சி (யிலுள்ளமயிர்) எனினுமாம்.‘உறாவகை‘ (இளமை நிலையாகப்) பொருந்தாத
வகை, ‘அதை‘ குறிப்பால் மூப்பை உணர்த்திற்று. ஊறுதல்-
|