- 130 -

இவ்வளப்பமில்லாத இளம் பருவத்தை, மனத்து வைப்பது என்- (நாம்) மனத்தில் மதித்துப் போற்றுதலால் யாது பயன், கிளைமையும் அனையதே - சுற்றத்தினரின் இயல்பும் (நிலைமையாமை யுடைய) அத்தகையதே (ஆகலின்), இனி-இனியாகிலும், நம் உளம்   கெழுமும் - நம் மனத்தே பொருந்தியுள்ள. தளைமையை - பாச (பந்த)த்தை, விடுவதுஏ தகுவது ஆம் - விட்டு விலகுவதே தக்கதாம். (எ-று.)

நிலை பேறில்லாத இளமை, கிளைமை முதலியவற்றை நிலையெனக்கருதாமல்  நிலைபெற்ற தவத்தை   கருதுவாமென உனின னென்க.

 “
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
  மேற்சென்று செய்யப்படும்.” 
 
(குறள்-335) 

கிழத்தனம் வருதற்கு முன்பே தவத்தின் மேற்சென்று நல்வினை தேடவேண்டும் என்ற முதுமொழிப்படி அசோகனும் உன்னினானென அறிக.  சுற்றத்தினரின் நிலையாமையையும்,

 “
கேள்தே வந்து கிளைகளாயிற்  றோன்றி
 
வாளாதே போவார்”
 
என்றார்  நாலடியாரில்(யாக்கை-10)

ஏகாரம் இரண்டும் தேற்றம் கெழுமுதல் - பொருந்துதல். தளை-கட்டு; பிணித்தல்        (8)

81. முந்துசெய் நல்வினை முளைப்ப வித்தலை
  சிந்தைசெய் பொருளொடு  செல்வ மெய்தினாம்
  முந்தையின் மும்மடி முயன்று புண்ணிய
  மிந்திர வுலகமு மெய்தற் பாலாதே.

(இ-ள்.) முந்து செய் நல்வினை - முற்பிறப்பில் நாம்செய்த நல்வினைகள், முளைப்ப-உதயமாக (அதனால்), இத்தலை-இப்பிறப்பில், சிந்தை செய் பொருளொடு-நாம் பெறக்கருதிய பொருள் எல்லாவற்றுடனும்,  செல்வம் - அரச