இவ்வளப்பமில்லாத இளம் பருவத்தை, மனத்து
வைப்பது என்- (நாம்) மனத்தில் மதித்துப் போற்றுதலால் யாது பயன், கிளைமையும்
அனையதே - சுற்றத்தினரின் இயல்பும் (நிலைமையாமை யுடைய) அத்தகையதே (ஆகலின்), இனி-இனியாகிலும்,
நம் உளம் கெழுமும் - நம் மனத்தே பொருந்தியுள்ள. தளைமையை - பாச (பந்த)த்தை,
விடுவதுஏ தகுவது ஆம் - விட்டு விலகுவதே தக்கதாம். (எ-று.)
நிலை பேறில்லாத இளமை, கிளைமை முதலியவற்றை நிலையெனக்கருதாமல்
நிலைபெற்ற தவத்தை கருதுவாமென உனின னென்க.
“ |
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை |
|
மேற்சென்று
செய்யப்படும்.” |
|
(குறள்-335) |
கிழத்தனம் வருதற்கு முன்பே தவத்தின் மேற்சென்று நல்வினை
தேடவேண்டும் என்ற முதுமொழிப்படி அசோகனும் உன்னினானென அறிக. சுற்றத்தினரின் நிலையாமையையும்,
“ |
கேள்தே வந்து
கிளைகளாயிற் றோன்றி |
|
வாளாதே போவார்” |
|
என்றார் நாலடியாரில்(யாக்கை-10) |
ஏகாரம் இரண்டும் தேற்றம் கெழுமுதல்
- பொருந்துதல். தளை-கட்டு; பிணித்தல் (8)
81. |
முந்துசெய்
நல்வினை முளைப்ப வித்தலை |
|
சிந்தைசெய்
பொருளொடு செல்வ மெய்தினாம் |
|
முந்தையின்
மும்மடி முயன்று புண்ணிய |
|
மிந்திர வுலகமு
மெய்தற் பாலாதே. |
(இ-ள்.)
முந்து செய் நல்வினை - முற்பிறப்பில் நாம்செய்த நல்வினைகள், முளைப்ப-உதயமாக (அதனால்),
இத்தலை-இப்பிறப்பில், சிந்தை செய் பொருளொடு-நாம் பெறக்கருதிய பொருள் எல்லாவற்றுடனும்,
செல்வம் - அரச
|