போகத்தையும், எய்தினாம்-அடைந்துளோம் (ஆதலின்),முந்தையின்
மும்மடி-முற்பிறப்பிற் செய்ததைக் காட்டிலும் மூன்று மடங்கு (மிகுதியாக), புண்ணியம்
முயன்று- நல்வினைகளை முயற்சியுடன் பெற்று, இந்திர உலகமும்-அகமிந்திர உலகத்தையும்,
எய்தற் பாலது - அடையும் முறைமை யுடையது. (எ-று.)
நாம் செய்த நல்வினைகளினாலேயே
நமக்குப் போகப்பொருள் முதலியன கிடைத்துள்ளன; ஆகலின், மீண்டும் அந்நல்வினைகளைப்
பெறமுயன்று தேவாதி சுகத்தையும் பெறவேண்டு் மென்று அசோகன் எண்ணினானென்க.
ஒருவன், இப்பிறப்பில் அடைந்தனுபவிக்கும் இன்பதுன்பங்களைக்
கொண்டே முற்பிறப்பிற் செய்த நல்வினைகளையும்; இப்பிறப்பில் உள்ள எண்ணம்
செயல் முதலியவற்றைக் கொண்டு மறுபிறவியின் இன்பதுன்பங்களையும், ஒருவாறு பகுத்தறிய
முடியும். ஆதலின், ‘முந்து...எய்தினாம்‘ என்று இவ்வசோகனும் எண்ணினானென்றுணர்க.
முந்து-முற்பிறவி, நல்வினை வருவதற்கு ஏதுவாய செயல் முதலியவற்றை, முந்துசெய்’தது என்றார். நல்வினை உத்தம மானிடனாகப்
பிறத்தற்குக் காரணமான நாமகருமம், பூர்ண ஆயுள் பெறுவதற்குக் காரணமான ஆயுஷ்யகருமம்
முதலியனவாகும். முளைத்தல்-உதயமாதல்; பயனளிக்குங்
காலத்து பலனைத்தரல். ‘அருவினை விளையுளாய பிறவி‘ என்றார்
(யசோ.46ல்.) முன்னரும். இத்தலை-இப்பிறவி நல்வினை செய்தார் நினைத்த பொருள்பெறுவதனை,
‘சிந்தை செய்பொருள்‘ என்றார்.
“அறவிய மனத்த
ராகி யாருயிர்க் கருளைச் செய்யிற் |
பறவையு நிழலும்
போல பழவினை யுயிரோ டாடி |
மறவியொன்
றானு மின்றி மன்த்ததே சுரக்கும் பால |
கறவையிற் கறக்குந் தம்மாற் காமுறப் பட்ட
தெல்லாம்.” |
என்று (சீவக.2877 ல்) கூறியது ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது.
ஒடு-உயிர்பின் மேற்று; இனி, “நாவீற்றிருந்த புலமா மகளோடு நன்பொற், பூ வீற்றிருந்த
புலமா
|