மேல் சென்று அடர்த்து - அவர்கள்
மேல் படை எடுத்துச் சென்று யுத்தம் செய்து, வஞ்சனை பலவும் நாடி - அவர்கள் செய்யும்
வஞ்சனைகள் பலவற்றையும் ஆராய்ந்து, வகுப்பன வகுத்து - அதற்குரிய தந்திரங்களைத்
தானும் செய்து, புஞ்சிய பொருளும் - (அவர்களுடைய) மிகுதியான பொருள்களையும், நாடும்
- அவற்றிற்கு வருவாயாகிய நாடுகளையும், புணர்திறம் - அடையும் வழியையும், நெஞ்சில்
புணர்ந்து - மனத்தே ஆராய்ந்து கொண்டு, துஞ்சுதல் இலாத கண்ணன் - நாள்தோறும் கண்ணுறக்கம்
இல்லானாய், துணிவன துணிந்து நின்றான்-செய்யத் தகுவனவற்றைச் செய்துப் பொருளைத்
தேடும் வழியிலேயே நின்றான்.
மண், பொன் முதலிய ஆசைவெறி பிடித்த
மன்னன் அதற்குரிய நினைவு செயல் முதலியவற்றால் கண்ணுறக்கமும் இலனாயினன் என்க.
தெவ்வர் - பகைவர். ‘வஞ்சனை பலவும் நாடி'; என்பதற்கு, ‘தான் செய்யும் பலவஞ்சனைகளையும் ஆராய்ந்து
எனினுமாம், ‘தூங்காமல் தூங்கி சுகம் பெறுவ தெக்காலம்'; என்னும் எக்காலக் கண்ணியைப் போலல்லாது இம் மன்னன் தீய
வழியில் துஞ்சுதலிலனாயினனென்றற்கு, ‘துஞ்சுதலிலாத கண்ணன்‘ என்றார். இனி, மன்னன்
துயின்றாலும் அவன் மனம் துயிலவில்லை எனினுமாம். (14)
87. |
தோடலார்
கோதை மாதர் துயரியிற் றொடுத் தெடுத்தப் கால் |
|
பாடலொ டியைந்த1
பண்ணி னிசைச்சுவைப் பருகிப்பல் |
|
ஊடலங் கினிய
மின்னி னொல்கிய மகளி ராடும |
|
நாடகம் நயந்து
கண்டும் நாள்சில செல்லச் சென்றான். |
(இ-ள்.)
தோடு அலர் கோதைர மாதர்-இதழ் விரிந்த பூமாலை யணிந்த மாதர்களின், பாடலொடு இயைந்த
- கண்டப்பாடலொடு பொருந்திய, துயரியில் தொடுத்து எடுத்த-யாழ் நரம்பில் தொடுத்துவாசிக்கப்பெற்ற,பண்ணின்
இசைச் சுவை - யாழிசையிங் சுவை.
|