(இ-ள்.)
மற்று ஓர் நாள் - வேறு ஒரு நாள், மன்னர் தம்மை அரசவைக் - கண் வந்திருந்த அரசர்களை,
மனைபுக விடுத்து - அவரவர்கள் மனைக்குச் செல்ல விடுத்து, மாலை - இரவில், கொற்ற
வேலவன் - வெற்றி வேலேந்தியயசோதரன், தன் கோயில் - தனது அந்தப் புரத்தேயுள்ள,
குளிர்மணிக் கூடம் ஒன்றில் - குளிர்ந்த சந்திரகாந்தக்கல் பதிக்கப் பெற்ற ஒரு
கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த, சுற்றுவார் திரையின்-சுற்றிலும் நீண்டதிரைகளை உடைய,தூமம்
கமழ் - நறும் புகையின் வாசனை வீசுகின்ற, துயில் சேக்கை துன்னி - பள்ளியணையை
அடைந்து, கற்றைவார் கவரி வீச - கவரிமான் மயிர்த் தொகுதியினால் ஆகிய சாமரையை
பெண்கள் வீச, களி சிறந்து - காமக் களிப்பு மிகுந்து, இனிது இருந்தான் - தன்மனைவியின்
வரவு நோக்கி இனிதிருந்தான்.
யசோதரன் பஞ்சணையைச் சார்ந்து இன்புற்றிருந்தன னென்க.
மாலை - மாலைக் காலமுமாம். கோயில்
- அரண்மனை.கூடம் - அறை, குளிர்மணி - சந்திரக்காந்தக் கல். (துயில்) சேக்கை
- துணியாலும் பஞ்சாலு மியற்றியது. (16)
அமிர்தமதியும்
பள்ளியறை சேர்தல்
89. |
சிலம்பொடு சிலம்பித் தேனுந் திருமணி
வண்டும் பாடக் |
|
கலம்பல வணிந்த வல்குற் கலையொலி கலவி
யார்ப்ப |
|
நலம்கவின்1
றினிய காமர் நறுமலர்த் தொடைய லேபோல் |
|
அலங்கலங் குழல்பின் றாழ வமிழ்தமுன் மதிய
ணைந்தாள். |
(இ-ள்.) சிலம்பொடு சிலம்பி - சிலம்பின் ஒலியோடு ஒலித்து, தேனும்
-தேன் கூட்டங்களும், திருமணி வண்டும் - அழகிய நீலமணி போலும் வண்டினங்களும், பாட-ரீங்காரம்
செய்ய, கலம்பல -பலவித ஆபரணங்களோடு, அல்குல் அணிந்த - இடையிலணிந்த, கலை ஒலி
- மேகலை
|