- 144 -

(இ-ள்.) மண்ணினுக்கு அரசன் தேவி - அவந்தி  நாட்டரசன் தேவியும்,  பண்ணினுக்கு ஒழுகும்   நெஞ்சின் பாவை -இசைக்கு உருகி ஒழுகுகின்ற  நெஞ்சோடு கூடியபாவை போன்றவளுமாகிய அமிர்தமதி,  இப்பண் கொள் -இப்பாடல் பொருந்தியுள்ள, செவ்வாய் - சிவந்த  வாயை யுடைய, அண்ணலுக்கு  அமிர்தம் ஆய - பெருமையிற் சிறந்தோனுக்கு அமிர்தம் போலினிக்கின்ற,  அரிவையர்க்கு - பெண்கட்கு, உரிய -உரிமையாகத் தருகின்ற, போகம் - இன்ப நுகர்ச்சி, விண்ணினுக்கு - தேவருலகத்தே, உளது - உளதாகும், என்று எண்ணி - என்று  நினைத்து, வெய்து உயிர்த்து - பெருமூச்செறிந்து,  உய்தல் செல்லாள் - பிழைக்க வகையறியாது,  மதிமயக்குற்றிருந்தாள் - அறிவு கலங்கப் பெற்றிருந்தாள். (எ-று.)

பாவை போன்ற தேவி,  அண்ணலுக்குரிய பெண்கள்  நுகரும் போகம், தேவருலகத்தே  உளதாகும் என்றெண்ணி  அது கிடைக்கப் பெறாமையில் வருந்தின ளென்க.செல்லான்  என்பது  முற்றெச்சம்.              (22)

பெண்மையின் புன்மை

95. மின்னினு நிலையின் றுள்ளம் விழைவுறின் விழைந்த யாவுந
  துன்னிடும் மனத்தின் தூய்மை சூழ்ச்சியு மொழிய  நிற்கும்
  பின்னுறு பழியிற் கஞ்சா பெண்ணுயிர்  பெருமை பேணா
  என்னுமிம் மொழிகட் கந்தோ விலக்கிய  மாயி னாளே

     (இ-ள்.) பெண் உயிர்-பெண்ணாய்ப் பிறந்த உயிர்கள், மின்னினும் நிலையின்று உள்ளம் - மின்னலைக் காட்டிலும் நிலையில்லாததாகிய தம் மனம்,  விழைவுறின் - (எவற்றை யேனும்)  விரும்பினால், விழைந்த யாவும் துன்னிடும் - விரும்பிய வெல்லாவற்றையும் பெற்றே தீரும், மனத்தின் தூய்மை சூழ்ச்சியும் ஒழிய நிற்கும் - உள்ளத்தின் தூய்மையும் ஆராய்ச்சியும் கெடுமாறு நிற்கும்,  பின் உறுபழியிற்கு அஞ்சா-