பண்ணிசையைக்
கேட்ட அரசி துயிலெழல்
93. |
ஆயிடை யத்தி
கூடத் தயலெழுந் தமிர்த மூறச் |
|
சேயிடைச்
சென்றோர் கீதஞ் செவிபுக விடுத்த லோடும |
|
வேயிடை தோளி
மெல்ல விழித்தனள் வியந்த நோக்காத் |
|
தீயிடை மெழுகி
னைந்த சிந்தையி னுருகினாளே. |
(இ-ள்.)
ஆயிடை -அச்சமயத்தில், அயல்-(அரண்மனைக்கு) அண்மையிலுள்ள, அத்தி கூடத்து - யானைச்
சாலையில் (இருந்த ஒருவன்), எழுந்து - நித்திரை விட்டெழுந்து, அமிர்தம் ஊற -இனிமை
மிக, ஓர் கீதம் - ஒப்பற்ற கானத்தினொலி, சேயிடைச் சென்று செவி புகவிடுத்தலோடும்
-
தொலையில் சென்று அங்குள்ளார்
காதிலும் கேட்குமாறு பாடியவுடன், வேய் இடை தோளி - பசிய மூங்கில் ஒப்பாகாது
பின்னிடைவதற்குக் காரணமான தோள்களையுடைய அமிர்தமதி, மெல்ல விழித்தனள்-உறக்கத்தினின்றும்
மெல்ல விழித்து, வியந்து --, நோக்கா - (மனத்தால்) நோக்கி, தீயிடை மெழுகின்
- (அவ்விசைகாரணமாக) அனலிற்பட்ட மெழுகினைப்போல , நைந்த சிந்தையின் தளர்ந்த
சிந்தையை உடையவளாகி, உருகினாள் - இளகிக் கரைந்தாள். (எ-று.)
யானைச்சாலையினின்றும் வெளிவந்த
கீதத்தைக் கேட்ட அரசி, கண்விழித்து மன நிறை தவறி உருகினா ளென்க.
ஆயிடை - செய்யுளில் சுட்டு நீண்டது. அத்திகூடத்தயல் எனலுமாம்.
(21)
அரசி மதிமயங்குதல்
94. |
பண்ணினுக் கொழுகு நேஞ்சிற் பாவையிப் பண்கொள் செவ் |
|
அண்ணலுக் கமிர்த மாய வரிவையர்க் குரிய போகம் [வாய் |
|
விண்ணினுக் குளதென் றெண்ணி வெய்துயிர்த் துய்தல் செல் |
|
மண்ணினுக் கரசன் றேவி மதிமயக் குற்றிருந் தாள். 94. [லாள் |
|