- 143 -

பண்ணிசையைக் கேட்ட அரசி துயிலெழல்

93. ஆயிடை யத்தி கூடத் தயலெழுந் தமிர்த மூறச்
  சேயிடைச் சென்றோர்  கீதஞ் செவிபுக விடுத்த லோடும
  வேயிடை தோளி மெல்ல விழித்தனள் வியந்த நோக்காத்
  தீயிடை மெழுகி னைந்த சிந்தையி னுருகினாளே.

(இ-ள்.) ஆயிடை -அச்சமயத்தில்,  அயல்-(அரண்மனைக்கு)  அண்மையிலுள்ள, அத்தி கூடத்து -  யானைச் சாலையில் (இருந்த ஒருவன்),  எழுந்து - நித்திரை  விட்டெழுந்து, அமிர்தம் ஊற -இனிமை மிக, ஓர்  கீதம் - ஒப்பற்ற கானத்தினொலி,  சேயிடைச் சென்று  செவி புகவிடுத்தலோடும் -

தொலையில் சென்று  அங்குள்ளார் காதிலும் கேட்குமாறு  பாடியவுடன்,  வேய் இடை  தோளி - பசிய  மூங்கில் ஒப்பாகாது   பின்னிடைவதற்குக் காரணமான  தோள்களையுடைய அமிர்தமதி,  மெல்ல விழித்தனள்-உறக்கத்தினின்றும் மெல்ல விழித்து, வியந்து --, நோக்கா - (மனத்தால்)  நோக்கி, தீயிடை  மெழுகின் - (அவ்விசைகாரணமாக)  அனலிற்பட்ட மெழுகினைப்போல ,  நைந்த சிந்தையின்  தளர்ந்த  சிந்தையை உடையவளாகி,  உருகினாள் - இளகிக் கரைந்தாள். (எ-று.)

யானைச்சாலையினின்றும்  வெளிவந்த   கீதத்தைக் கேட்ட அரசி,  கண்விழித்து  மன நிறை  தவறி  உருகினா ளென்க.

ஆயிடை - செய்யுளில்  சுட்டு நீண்டது. அத்திகூடத்தயல் எனலுமாம்.          (21)

அரசி மதிமயங்குதல்

94.

பண்ணினுக் கொழுகு நேஞ்சிற் பாவையிப் பண்கொள் செவ்

 

அண்ணலுக் கமிர்த மாய வரிவையர்க் குரிய போகம் [வாய்

 

விண்ணினுக் குளதென் றெண்ணி வெய்துயிர்த் துய்தல் செல்

 

மண்ணினுக் கரசன் றேவி மதிமயக் குற்றிருந் தாள்.  94. [லாள்