பரிவு
கொண்டனை என் - நின் உள்ளத்துக் துன்புற்றது என்ன? நின் பெருமை நன்றே - நின்னுடைய
பெருமை நன்று‘ என்றாள் - என்று கூறினாள்; (எ-று.)
குணவதி, அரசியின் கருத்தை அறிந்தாளாயினும், அதனை மாற்றக் கருதி, தான் அறியாதாள்போல்
பிறிது கூறினா ளென்க.
‘அறிந்தனளல்லள்‘ என்பதை உரு சொல்லாகக் கொள்ளலும் ஆம். மற்று, அசை, நனவு -
விழிப்பு, ஜாக்ரதை. (26)
அரசி
மீண்டும் தன் கருத்தை வெளிப்படையாகக்
கூற, தோழி அஞ்சுதல்.
99. |
என்மனத் திவரு மென்னோ யிவணறிந்1
திலைகொ லென்றே |
|
தன்மனத் தினைய வட்குத் தானுரைத் திடுத லோடும் |
|
நின்மனத் திலாத சொல்லை நீபுனைந் தருளிற் றென்கொல் |
|
சின்மலர்க் குழலி யென்றே2
செவிபுதைத் தினிது சொன்னாள். |
(இ-ள்.)
(அமிர்தமதி தோழியை நோக்கி) ‘என்மனத்து இவரும் - என் மனத்தில் படர்கின்ற,
என் நோய் - எனது காமநோயை, இவண் - இவ்விடத்தில், அறிந்திலைகொல் என்று -(நீ)
தெரிந்துகொள்ளவில்லைபோலும்‘ என்று சொல்லி, அவட்கு - அத் தோழிக்கு, தன்
மனத்தினை- தன் உள்ளக்கருத்தினை, உரைத்திடுதலோடும் - வெளிப்படையாகக் கூறியவுடனே,
(அவள்), செவி புதைத்து - (தன்) இருகாதுகளையும் பொத்திக்கொண்டு, ‘சில் மலர்
குழலி - சிலவாகிய மலரை யணிந்த கூந்தலையுடைய அரசியே, நின் மனத்து - உன் மனத்தில்,
இலாத - பொருந்தி யில்லாத, சொல்லை -இழிசொல்லை, நீ புனைந்து அருளிற்று - நீயே
கற்பனையாகச் சொல்லியது, என் கொல் - என்ன காரணம்? என்று இனிது சொன்னாள்
- என்று இனிதாகச்சொன்னாள்; (எ-று.)
|