வெளிப்படையாகக்
கூறிய அரசியின் இழிசொல்லைக் கேட்டவுடன் தோழி இருகாதுகளையும் பொத்திக்கொண்டு,
‘நின் மனத்தில் என்று மில்லாத இப் புனைந்துரையைக் கூறியதற்குக் காரணம் என்ன?
என்று வினாவினா ளென்க.
இவர்தல் - படர்தல், வியாபித்தல், குழலி, அண்மை விளி. தான், அசை. (27)
அரசி
ஆற்றாமையால் உயிர்விடுவேன் என்றல்.
100. |
மாளவ பஞ்ச மப்பண் மகிழ்ந்தவ னமுத வாயிற் |
|
கேளல னாயி னாமுங் கேளல1
மாது மாவி |
|
நாளவ மாகி யின்னே2
நடந்திடு நடுவொன் றில்லை |
|
வாளள வுண்கண்3
மாதே மறுத்துரை மொழியி னென்றாள். |
(இ-ள்.) ‘வாள் அளவு உண்கண்
மாதே - வாள் போன்ற கூரியதும் மை தீட்டப் பெற்றதுமாகிய கண்களையுடைய மாதே,
அவன் அமுதவாயில் - அப் பாடலைப்பாடியவனுடைய அமிர்தம் போன்ற வாயினால், மாளவ
பஞ்சமப்பண் - மாளவபஞ்சமம் என்ற பண்ணை, மகிழ்ந்து கேளலன் ஆயின் - மகிழ்ந்து
கேட்கிலேனாயின், நாமும் கேள் அலம் ஆதும் - நாமிருவரும் நட்பினரல்ல ராவோம்;
உரை மறுத்து மொழியின் - என் உரையை மறுத்துச் சொல்வாயாயின், நாள் அவம் ஆகி
- என் வாழ்நாள் வீண்நாளாதலின், ஆவி இன்னே நடந்திடும் - என் உயிரும் இப்பொழுதே
நீங்கிவிடும்; நடு ஒன்று இல்லை -இவ்விரண்டிற் கிடையில் வேறொன்றும் நிகழ்தற்கில்லை'; என்றாள்
- என்று (தோழிக்குக்) கூறினாள்; (எ-று.)
அரசி, தோழியை நோக்கி, ‘அப் பண்ணைப் பாடியவனைக் கூடி மகிழ்ந்து பாடலைக் கேளேனாயின்
என் ஆவி நடந்திடும'; என்றாள்
என்க.
1
கேளலமாயி.
2
யின்றே.
3
வொண்கண். |
|