பண் மகிழ்ந்து கேட்டல், அல்லது ஆவி நடந்திடுதல் இவ் விரண்டையுத் தவிர, வேறுவித
வாழ்க்கை யில்லை யென் பாள் ‘நடுபொன்றில்லை‘ என்றாள். (28)
அரசி
தன் எண்ணத்திற்குத் தோழி மறுத்துக்
கூறாவண்ணம் புகழுதல்.
101. |
என்னுயிர்க்
கரண நின்னோ டின்னிசை புணர்த்த1
காளை |
|
தன்னின்மற்
றொருவ ரில்லை தக்கது துணிக வென்ன |
|
என்னுயிர்க்2
கேத மெய்தி னிதுபழி பெருகு மென்றே |
|
துன்னும்வா
யவளோ டெண்ணித்3 தோழியு4
முன்னி னாளே. |
(இ-ள்.) ‘என் உயிர்க்கு அரணம்
- என் உயிருக்குக் காவலாகின்ற, நின்னோடு - உன்னோடு, இன்னிசை புணர்த்த - இனிய
இசையினால் என்னைப் பிணித்த, காளைதன்னின்-காளையினும், மற்றொருவர் இல்லை -
வேறொருவர் எனக்கு ஆவார் இல்லை; என் உயிர்க்கு -என் உயிருக்கு, ஏதம் எய் தின்-கேடு
வருமாயின், இது பழி பெருகும் என்று -இப்பழி பெருகிப் பரவும் என்று சொல்லி, தக்கது
துணிக -(இதற்குச்) செய்யத்தக்க தொன்றைத் துணிவாயாக‘ என்ன-என்று அரசி கூற, துன்னும்
வாய் -அவ் விசைய வனைக் கிட்டும் வழியை, அவளோடு - அவ் வமிர் தமதியோடு தோழியும்
- குணவதியும், எண்ணி - ஆராய்ந்து, உன்னினாள்-(பின் தனக்குள்ளே) சிந்தித்தாள்;
(எ-று.)
‘என் உயிர்க்குப் புகலாவார் நீயும் அவ் விசையவனுமே; அவனை அடைவதற்கு நீயே துணையாக
வேண்டும்; நீ இணங்காவிடின், என் உயிர் நீங்கும்; அப் பழி உன்னையே சாரும்.
ஆகவே, உனக்கு எது தகுதியோ, அதனைச் செய்வாயாக‘ என்று அரசி கூற, தோழி வேறு வழியின்றி
அவ்விசையவனை அடையும்மார்க்கத்தை உன்னினா ளென்க. இனி, அரணம் என்பதற்கு ரக்ஷகராவார்
எனலுமாம். (29)
1
யுணர்த்த.
2
யின்னுயிர்க்.
3
டொன்றி.
4
துன்னினாளே. |
|